மேலும் அறிய

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தபோவது யார் ? நீடிக்கும் குழப்பம் - தொடரும் போராட்டங்கள்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தபோவது யார் ? நீடிக்கும் குழப்பம் - தொடரும் போராட்டங்கள். பரபரப்பாகும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

மதுரையில் வருகிற 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரி அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால்பாசன விவசாயிகள் சங்கத்தினர் என இரு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இரு தரப்பும் இணைந்து நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் கோட்டச்சியர் தலைமையில் நடைபெற்ற 3கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு 4ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தின் போது அறிவிக்கப்பட்டது.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தபோவது யார் ? நீடிக்கும் குழப்பம் - தொடரும் போராட்டங்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம கமிட்டியினர் போட்டியை நடத்த விடாமல் தி.மு.க., அமைச்சர் மூர்த்தி தடுப்பதாக கூறி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இன்று வட்டாச்சியர் மூலம் போட்டி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் போராட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக வந்த தகவலையடுத்து அவனியாபுரம் பகுதியில் காவல்துறையினர் குவித்துவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரி தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்துவந்தும், கைகளில் நெல் நாற்றுகளை ஏந்தியபடியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தபோவது யார் ? நீடிக்கும் குழப்பம் - தொடரும் போராட்டங்கள்
 
இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளிக்க கோரியும், அமைச்சரை கண்டித்தும் உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியை சேர்ந்த அன்பரசு, சுரேஷ், செல்வக்குமார், பிச்சைராஜன் உள்ளிட்டோர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை கடந்த 3 ஆண்டுகளாக உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி மாவட்ட நிர்வாகம் நடத்திய நிலையில் இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் தென்கால்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம கமிட்டியினரிடையே மல்லுக்கட்டு நடைபெறுவதால் போட்டியை யார் நடத்துவது என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இரு தரப்பு பிரச்னை தொடர்வதால் மாவட்ட நிர்வாகமே நடத்தவேண்டும் எனவும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அடுத்தடுத்து இரு தரப்பினரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் ஆட்சியர் அலுவலகம் போராட்டகளமாக மாறியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget