மேலும் அறிய

Vaigai Dam: வைகை அணையிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பெரியார் பாசன பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக மதுரை ,ராமநாதபுரம் ,திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்தும் நீர் பாசனம் பெறுகின்றது. இந்த அணை மொத்தம் 71 அடி உயரம் கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும். அப்போது அணை நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் வைகை அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொறுத்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிக தீவிரம் அடைந்ததால் அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Purattasi 2024: பக்தர்களே! புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு மிகவும் உகந்தது? இதுதான் காரணம்


Vaigai Dam: வைகை அணையிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கிய நிலையில் 65 அடியை நெருங்கியதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு அணை நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர், ஆனால் திடீரென மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. அதனால் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கவில்லை மதுரை மாநகராட்சி குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து 969 கன அடி நீர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை கண்டதால் விவசாயிகள் பாசன வசதிக்கு தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தனர்.

Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..


Vaigai Dam: வைகை அணையிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

தற்போது அணையின் நீர்மட்டம் 61.29 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 5௦1 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 69 கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3854 மில்லியன் கன அடியாக உள்ளது.இந்நிலையில் விவசாயிகள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தமிழக அரசு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வைகை அணையில் இருந்து  நேற்று முதல் அடுத்த 120 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பெரியார் பாசன பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 1130 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 80461 மில்லியன் கன அடி நீர்திறக்க திட்டமிட்டுள்ளனர்.

Chess Olympiad 2024:"எங்க வந்து யாருகிட்ட".. செஸ் ஒலிம்பியாட்! 5வது சுற்றிலும் இந்தியா ஆதிக்கம்! மிரளும் வீரர்கள்


Vaigai Dam: வைகை அணையிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு

அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் பிரதான கால்வாய் மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும், அப்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
Embed widget