மேலும் அறிய

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

’’தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது’’

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணையின்  நீர் மட்டம் உயர தொடங்கியதையடுத்து.  அணையிலிருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மஞ்சளார் அணையின் மொத்த  நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மஞ்சளார் அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1,873 ஏக்கர் நிலத்திற்கு 40 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அணையில் பாசனத்திற்கான நீரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  திறந்து வைத்து  மலர் நவதானியங்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 135 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல் படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நீர் மட்டம் 54.80 (57) அடியாக உள்ளது.  நீர் திறப்பானது 100 கன அடியாக உள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பாசன வசதி பெரும்  2,865 ஏக்கர் நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து பாசனத்திற்கு  30 கன அடி நீர் திறக்கப்பட்டது.  இந்த நீர் திறப்பால் பெரியகுளம், மேல்மங்களம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் உள்ள நன்செய் நிலங்களான 1,825 ஏக்கரும் புதிய புன்செய் பாசனமான 1,040 ஏக்கரி நிலங்கள் பயன்படும் வகையிலும்  நீர் திறக்கப்பட்டது.  52 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த முறை பாசனத்தின்படி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அணையின் இன்றைய நீர் மட்டம்  126.28 (126.28) அடியாகவும் உள்ளது. நீர் திறப்பானது 30 கன அடியாக உள்ளது. நீரை சிக்கனமாக பயண்படுத்தி அதிக மகசூல் அடைய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
காலி பணியிடங்கள், ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
காலி பணியிடங்கள், ஊதியம்: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரிக்கை!
Embed widget