மேலும் அறிய

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

’’தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது’’

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணையின்  நீர் மட்டம் உயர தொடங்கியதையடுத்து.  அணையிலிருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மஞ்சளார் அணையின் மொத்த  நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மஞ்சளார் அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1,873 ஏக்கர் நிலத்திற்கு 40 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அணையில் பாசனத்திற்கான நீரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  திறந்து வைத்து  மலர் நவதானியங்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 135 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல் படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நீர் மட்டம் 54.80 (57) அடியாக உள்ளது.  நீர் திறப்பானது 100 கன அடியாக உள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பாசன வசதி பெரும்  2,865 ஏக்கர் நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து பாசனத்திற்கு  30 கன அடி நீர் திறக்கப்பட்டது.  இந்த நீர் திறப்பால் பெரியகுளம், மேல்மங்களம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் உள்ள நன்செய் நிலங்களான 1,825 ஏக்கரும் புதிய புன்செய் பாசனமான 1,040 ஏக்கரி நிலங்கள் பயன்படும் வகையிலும்  நீர் திறக்கப்பட்டது.  52 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த முறை பாசனத்தின்படி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அணையின் இன்றைய நீர் மட்டம்  126.28 (126.28) அடியாகவும் உள்ளது. நீர் திறப்பானது 30 கன அடியாக உள்ளது. நீரை சிக்கனமாக பயண்படுத்தி அதிக மகசூல் அடைய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
Embed widget