மேலும் அறிய

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

’’தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது’’

வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணையின்  நீர் மட்டம் உயர தொடங்கியதையடுத்து.  அணையிலிருந்து தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மஞ்சளார் அணையின் மொத்த  நீர் மட்டம் 57 அடியில் 55 அடியை எட்டியது. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவின் படி மஞ்சளார் அணையில் இருந்து தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, டி.கல்லுபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் 100 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்டது. இதில் 3,386 ஏக்கர் பழைய ஆயக்கட்டிற்க்கு 60 கன அடியும், புதிய ஆயகட்டில் உள்ள 1,873 ஏக்கர் நிலத்திற்கு 40 கனஅடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

அணையில் பாசனத்திற்கான நீரை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  திறந்து வைத்து  மலர் நவதானியங்களை தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் இருப்பை கணக்கில் கொண்டு 135 நாட்களுக்கு முறைப்பாசனம் தேவைக்கு ஏற்ப அமுல் படுத்தப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நீர் மட்டம் 54.80 (57) அடியாக உள்ளது.  நீர் திறப்பானது 100 கன அடியாக உள்ளது.


தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பாசன வசதி பெரும்  2,865 ஏக்கர் நிலங்களில் முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து பாசனத்திற்கு  30 கன அடி நீர் திறக்கப்பட்டது.  இந்த நீர் திறப்பால் பெரியகுளம், மேல்மங்களம், லெட்சுமிபுரம், தாமரைக்குளம்,  பகுதியில் உள்ள நன்செய் நிலங்களான 1,825 ஏக்கரும் புதிய புன்செய் பாசனமான 1,040 ஏக்கரி நிலங்கள் பயன்படும் வகையிலும்  நீர் திறக்கப்பட்டது.  52 நாட்களுக்கு வினாடிக்கு 30 கன அடியும், அடுத்த முறை பாசனத்தின்படி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கான நீரை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அணையின் இன்றைய நீர் மட்டம்  126.28 (126.28) அடியாகவும் உள்ளது. நீர் திறப்பானது 30 கன அடியாக உள்ளது. நீரை சிக்கனமாக பயண்படுத்தி அதிக மகசூல் அடைய விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தால்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Embed widget