மேலும் அறிய

ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு - தேனியில் பரபரப்பு..!

தேனியில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், இபிஎஸ்க்கு எதிராக கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம். ஓபிஎஸ் , இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.

சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது சட்டத்துக்குப் புறம்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது எனக் கூறி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது சிலர் அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசினர். மேலும், அவர் பயன்படுத்திய பிரச்சார வாகனத்தின் டயர் பஞ்சர் ஆக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கோசங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு - தேனியில் பரபரப்பு..!

இதனைதொடர்ந்து, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்க்கும் இடையே பிளவு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் , இபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே போஸ்டர் மோதல், சமூகவளைதல கருத்து மோதல் என அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் இபிஎஸ்க்கு ஆதரவளிப்பதாக முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த ஜக்கையன் தலைமையில் சிலர் சென்னை சென்று இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். 


ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு - தேனியில் பரபரப்பு..!

இதனை தொடர்ந்து இன்று, தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் தலைமையில் இபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த இபிஎஸ்சின் ஆதரவாளர்களை ஓபிஎஸ்சின் ஆதரவாளர்கள் ஊருக்குள் விடாமலும், கூட்டத்திற்கு செல்லக்கூடாது எனவும் இருதரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. கருத்து மோதல் இறுதியில் தள்ளு முள்ளாக மாறியது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் ஆலோசனை கூட்டமானது தொடங்கியது.


ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு - தேனியில் பரபரப்பு..!

இந்த கூட்டத்தில் ஆண்டிபட்டி அதிமுகவை சேர்ந்த பேரூராட்சி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நின்று இபிஎஸ் ஒழிக, கொடநாடு வழக்கின் கொலைகாரா ஒழிக என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வால் இரு தரப்பினர் இடையே சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பரபரப்புக்கு பின்பு தொடர்ந்து ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தற்போது புதிதாக இபிஎஸ் ஆதரவாளர்களாக இணைந்த ஆண்டிபட்டியை சேர்ந்த பேரூராட்சி கழகத்தின் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேசினர் .


ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு - தேனியில் பரபரப்பு..!

இந்த கூட்டத்தில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜக்கையன் பேசுகையில், அதிமுக கழகத்தை வழி நடத்துவதற்கு ஒற்றை தலைமையே வேண்டும். அந்த ஒற்றை தலைமையானது ஈபிஎஸ் அவர்களிடமே உள்ளது. எனவும் அதிமுகவை சேர்ந்த அனைத்து தொண்டர்களும் இபிஎஸ்சை ஒற்றை தலைமை ஏற்க விரும்புவதாகவும் தற்போது இருக்கும் ஆளும் கட்சியான திமுகவை எதிர்க்கட்சியாக எதிர்ப்பதற்கு ஒற்றை தலைமை கொண்ட இபிஎஸ் தலைமையிலான அதிமுகவே தேவை எனவும் பேசினார். மேலும் தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் ஒற்றை தலைமையை வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியை தலைமை ஏற்க மேலும் அவரை பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துவதாகவும் அடுத்து வரும் நகர்வுகளில் அதிமுக ஒற்றை தலைமையோடு இபிஎஸ் தலைமையில் செயல்படும் எனவும்  கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget