மேலும் அறிய

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் ரேசன் பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையில் பயணாளிகள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.

நியாயவிலை கடைகளில் நடைமுறையிலுள்ள  பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல்கள் உள்ளதால், பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் இந்த பயோ மெட்ரிக் முறையிலேயே பொருள்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த பயோ மெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டம் அதிருத்தியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. 

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான  நியாய விலைக் கடைகளில்,  பயோ மெட்ரிக்  முறையில் பயனாளிகள்  விரல் ரேகை பதிவாகாததால், பயனாளிகள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இலவச அரிசி, பருப்பு, எண்ணெய்,கோதுமை போன்ற பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பயனாளியின் ஆதார் அட்டையில் உள்ள விரல் ரேகை பொருட்கள் வாங்கும்போது வைக்கப்படும் விரல் ரேகையுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் பயனாளிகள் விரல் ரேகையை பதிவு செய்யும் போது பயோ மெட்ரிக் இயந்திரம் ஏற்க மறுக்கிறது. பயனாளிகளின் விரல் ரேகை பதிவாகவில்லை என ரேஷன் பொருட்களை தராமல் பணியாளர்கள் திருப்பி அனுப்புவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பயனாளிகள் ஆதார் அட்டையில் விரல் ரேகையை புதுப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தேனியில் பயோ மெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்...!

தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் விரல் ரேகை அப்டேட் செய்வதற்கு தினமும் பலர் கூடுகின்றனர். ஆனால் தாலுகா  அலுவலக இ-சேவை மையத்தில் தினமும் 50 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி அவர்களுக்கான குறை சரிசெய்யப்படுகிறது. மற்றவர்கள் மறுநாள் வந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஆதார் அட்டையில் புதுப்பித்து அப்டேட் ஆகி வருவதற்கு ஒரு வாரகாலம் ஆவதால், அந்த ஒரு வாரம் நியாயவிலைக் கடைகளில் போடப்படும் பொருட்களை வாங்க முடியவில்லை என பயனாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. எனவே சிக்னல், நெட் ஒர்க் குறைபாடு தவிர்த்து  நியாய விலைக் கடைகளில் நவீன பயோ மெட்ரிக் இயந்திரம் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

கண்ணகி விண்ணுகலம் சென்ற பத்தினிக்கோட்டை... இது கம்பம் நகரம் உருவான கதை..!

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget