மேலும் அறிய

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

’’தமிழில் அர்ச்சனை செய்வது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது, தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் எளிதில் புரிகிறது இதனால் மன நிறைவோடு செல்கின்றனர்’’

பெரியாரின் கனவாக இருந்த திட்டமான, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. இது குறித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூறும்போது, பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி கூறியிருந்தார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற உடன், இந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றும்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் பல முக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது.  அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58  பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணி ஆணை வழங்கினார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் வீரபாண்டியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் முதல் முதலாக பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு  அர்ச்சகருக்கான பயிற்சி பெற்று உள்ளார். பல அரசியல் சூழ்நிலை காரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்படாமல் இருந்ததால் இவர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். தற்போது இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!
மேலும் அனைத்து திருக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்  என்ற அறிவிப்பு வெளியான நிலையில்  தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில்  தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலிலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட முத்துப்பாண்டி உட்பட  மூன்று அர்ச்சகர்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்து வருகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்வது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

இது குறித்து புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட முத்துப்பாண்டி கூறுகையில், " அர்ச்சகராக வேண்டும் என்ற எனது குறிக்கோள் ஆனது, அர்ச்சகர் பயிற்சி பெற்று 14 ஆண்டுகளுக்கு பின்பு எனது கனவு நிறைவேறி உள்ளது. மேலும் அர்ச்சகர் ஆனபின்பு தமிழில் அர்ச்சனை செய்வது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் எளிதில் புரிகிறது இதனால் மன நிறைவோடு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
TN Weather Update: மிக கனமழை பொளக்கும், 18 மணி நேரம், வடமாவட்டங்களுக்கு அலெர்ட் - வெதர்மேன் வானிலை அப்டேட்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Embed widget