மேலும் அறிய

Madurai: 5 அடி உயர தண்ணீரில் சிக்கி தவித்த பார்வையற்றவர்கள் பாடல் குழு! மதுரையில் பரபரப்பு!

மதுரையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் கருடர் பால சுரங்கப்பாதையில் 5 அடி உயர தண்ணீரில் சிக்கி தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பாடல் குழுவினர் மீட்கப்பட்டனர்.

மதுரையில் தொடர் மழை

 
மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தொடர்ச்சியாக கனமழை பெய்தது. அதன் காரணமாக மாநகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மதுரை ஆரப்பாளையம், மீனாட்சி பஜார், சிம்மக்கல், செல்லூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய இணைப்பு சுரங்கபாதையான ராஜாமில் சாலையில் உள்ள கர்டர்பால சுரங்கபாதையில் மழை நீர் அதிகளவிற்கு வரத்தொடங்கியது.
 
இதனால் இடுப்பளவிற்கு தண்ணீர் சென்றுகொண்டிருந்தபோது பைக் போன்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கனரக வாகனங்கள் கடந்துசென்றது. அந்த நேரத்தில் தொடர்ந்து கனமழை பெய்துகொண்டே இருந்ததால் மழைநீர் அதிகளவிற்கு தேங்க்தொடங்கியதால் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. 
 

அதிகரித்த மழை நீர்:

அப்போது தண்ணீரை கடந்துசென்ற திண்டுக்கல் மாவட்டத்தை  சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பாடல் குழுவினர் சென்ற வாகனம் தண்ணீரின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் தண்ணீரில் இருந்து பார்வையற்றோர் வெளியேற முடியாமல் தவித்தனர். அப்போது  அருகில் இருந்த பொதுமக்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளாக மாரியப்பன் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரையும் மீட்ட நிலையில் அம்பிகா , நாகேந்திரன் உள்ளிட்ட 3 பேர் வாகனத்தில் சிக்கிக்கொண்டனர்.
 
இதனையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கி வர முடியாத சூழலில் தண்ணீரின் அளவும் அதிகரித்துகொண்டே இருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனிடையே சுரங்கபாதையில் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்ட பின்னர் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் சிக்கி தவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மூவரையும் கயிறு மூலமாகவும், பார்வையற்றோரை தோளில் சுமந்தவாறும் தூக்கிவந்து பத்திரமாக மீட்டனர்.
 

நாய்குட்டி மீட்பு:

இதனைத்தொடர்ந்து தண்ணீரின் நடுவே பழுதாகி நின்ற வாகனத்தையும் கயிறு மூலமாக இழுத்து சுரங்கபாதையை கடந்து சாலையோரத்தில் நிறுத்தினர். பார்வையற்றோரை மீட்கும் பணியின்போது பார்வையற்ற பெண் வைத்திருந்த நாய்குட்டி ஒன்றையும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் கைகளில் தாங்கியபடி மீட்டுவந்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைத்தபோது அதனை ஆரத்தழுவி தனது தோளில் போட்டுக்கொண்ட பார்வையற்ற பெண் தீயணைப்புத்துறையினருக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார். 
 

கோரிக்கை

இதே கருடர் பால சுரங்கப்பாதையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இரவு நேரத்தில் பெய்த கன மழையால் தேங்கிய நீரில் கேரள மாநில சுற்றுலா பயணிகள் பேருந்துகள் சிக்கியபோது விடிய விடிய தண்ணீரிலயே காத்துக்கிடந்த சம்பவமும் நடைபெற்றது. கருடர் பால சுரங்க பாதையில் சிறு மழைக்கு கூட மழை நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், ஒவ்வொரு மழைக்கும் சுரங்க பாதையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதோடு திடீரென தண்ணீரின் அளவு அதிகரித்து வாகனங்கள் சிக்கி உயிருக்கு போராடும் நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே இதற்கு உரிய நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் இது போன்று மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்டர் பால சுரங்க பாதையில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget