ராமேஸ்வரத்தில் இருந்து செகந்தராபாத் நகருக்கு நாளை முதல் சிறப்பு ரயில்...!
’’ராமேஸ்வரம் - செகந்தராபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை நாளை முதல் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு’’



“தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 1,2,3 தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,506 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து சென்னையில் இருந்து 9,806 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக நவம்பர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகலில் தினசரி இயங்கக்கூடிய 4,319 சிறப்பு பேருந்துகளும் ஏனைய முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17,1719 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் பொது மக்களுக்கு வசதியாக மாதவரம் பேருந்து நிலையம் கே.கே நகர் பேருந்து நிலையம் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் பூந்தமல்லி பேருந்து நிலையம் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேடு என ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி நசரத்பேட்டை வழியாக வெளிச்சுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும். பொதுமக்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வசதியாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 கவுண்டர்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 2 கவுண்டர்கள் என மொத்தம் 12 கவுண்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் இதனை தடுக்க பொதுமக்கள் புகார் அளிக்க கூடிய வகையில் toll-free 1800 425 6151, 044 24749002 எண்களும் வெளியிடப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.
Before You Go
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்





















