மேலும் அறிய

Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

Crime : 14 வயதான தனது தம்பி அப்சான் புற்று நோயாளியான தாயார் ஷெமி, காதலி பர்சானா ஆகியோரை வெட்டியுள்ளார். தாயாரைத் தவிர தம்பியும், காதலியும் உயிரிழந்தனர்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 23 வயது வாலிபர் அஃபான் என்பவர் ஐந்து பேரை வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு. காதலி,  தனது சகோதரன், பெரியப்பா, பெரியம்மா மற்றும் பாட்டி ஆகியோர் கொலை. வெட்டப்பட்ட புற்று நோயாளியான தாயார் மருத்துவமனையில் அனுமதி. 


Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் அஃபான். இவரது தந்தை வெளிநாட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.  வெளி  ஊரான எஸ்.என்.புரம் பகுதியை சேர்ந்த பர்சானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் அஃபான், இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு  காதலியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

கொல்லம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதுகலை படித்து வரும் பர்சானா டியூசனுக்கு செல்வதாக கூறி புறப்பட்டவர் வீடு திரும்பாத நிலையில் காதலனுடன் அவரது வீட்டிற்கு சென்றது பர்சானாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இந்நிலையில்   நேற்று  மாலை அஃபான்    தனது தந்தையின் தாய் என்பத்தி எட்டு வயதான சல்மா பீவியின் வீட்டிற்கு சென்று அவரை தலையில் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், தனது தந்தையின் அண்ணனான லத்தீப் என்பவரது வீட்டிற்குச் சென்று லத்தீப் மற்றும் அவரது மனைவி சஷாதிகா ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.


Kerala crime : போதையில் காதலி உட்பட 5 பேரை கொலை செய்த வாலிபர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!

பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய அஃபான் 14 வயதான தனது தம்பி அப்சான் புற்று நோயாளியான தாயார் ஷெமி, காதலி பர்சானா ஆகியோரை வெட்டியுள்ளார். தாயாரைத் தவிர தம்பியும், காதலியும் உயிரிழந்தனர். தாயார் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொலைக்கு பின் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், ஆறு பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.  போதை மருந்துக்கு அடிமையான அஃபான் ஐந்து பேரை கொலை செய்த பின் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அஃபான் காவல் நிலையத்தில் சரணடைந்த போது ஆறு பேரை கொலை செய்ததாக கூறினாலும் தாயார் உயிர் பிழைத்ததால் 5 பேர் மட்டுமே கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் போதைப் பொருளுக்கு அடிமையான அஃபான் அவ்வப்போது தனது தந்தையின் தாயார் சல்மா பிபி இடம் பணம் கேட்டு வந்ததாகவும், ஏற்கனவே பலமுறை பணம் கொடுத்த சல்மா பீவி தற்போது பணம் கேட்டபோது அளிக்கவில்லை என்பதோடு அவரது நகையை அடகு வைப்பதற்காக கேட்டபோது சல்மா பீவி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; Crime : 10-ஆம் வகுப்பு மாணவயின் கழுத்தை அறுத்த 12 ஆம் வகுப்பு மாணவன்.. நடந்தது என்ன?

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி பணிபுரிந்த ஆபார் சமீபகாலமாக பண நெருக்கடியில் காணப்பட்டதால் குடும்பத்தினர் பணம் வழங்க மறுத்ததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அதை குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த கொலைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எலிமருந்து சாப்பிட்ட அஃபானை போலீசார் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஐந்து பேரை கொலை செய்த இளைஞன் தொடர்பான சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget