மேலும் அறிய

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங்.. விசாரணை ஒத்திவைப்பு

ஓராண்டிற்குள் அடுத்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. பல மனுதாரர்கள் முந்தைய கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர்

நீதிமன்றச் செய்திகள்

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங்கை பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திய பிறகு  நடத்த உத்தரவிட கோரிய வழக்குகள்.

தற்போதைய நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 12ம் தேதி நடக்கிறது. பொது மாறுதல் கவுன்சலிங் நடத்திய பிறகே, பதவி உயர்வு கவுன்சலிங் நடத்துமாறு உத்தரவிட வேண்டுமென கூறியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி ஜி.சந்திரசேகர் விசாரித்தார்.அரசு தரப்பில், ஜனவரி மற்றும் மார்ச்சில் இரு கவுன்சிலுங்கும் நடந்துள்ளது. தற்போது பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கிறது. ஓராண்டிற்குள் அடுத்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. பல மனுதாரர்கள் முந்தைய கவுன்சலிங்கில் பங்கேற்றுள்ளனர் என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, அரசுத் தரப்பில் தற்போதைய நிலை குறித்த அறிக்கைய தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


புதுக்கோட்டை மாவட்டம், மனவிடுதி கிராமத்தில் வனப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம், மனவிடுதி கிராமத்தை சேர்ந்த சிவகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "புதுக்கோட்டை மாவட்டம் மனவிடுதி கிராமம் பகுதியில் 2000 விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.பல்வேறு போராட்டங்களுக்கு பின் 2019ஆம் ஆண்டு மனவிடுதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.அதன் பின் 2021ஆம் ஆண்டு மனவிடுதி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய வசதி இல்லை எனக் கூறி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

அதன்படி பழைய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நெல் கொள்முதல் நிலையம் மாற்றி அமைக்கப்பட்டது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த இடத்திற்கு செல்வதற்கு செலவு அதிகமாக உள்ளது மேலும் வனவிலங்குகள் தாக்குவதற்கான அபாயம் உள்ளது. சாலை வசதியும் சரியாக இல்லை.

எனவே, புதிதாக வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய வகையில் வேறு இடத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

தலைப்பு செய்திகள்

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு... +2 படித்திருந்தால் போதும் - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... யார் இந்த சித்தார்த் போகர்னா - முழு விவரம் !
மதுரை மாவட்ட புதிய உதவி ஆட்சியர்... அகில இந்திய அளவில் 216-வது இடம் பிடித்த சித்தார்த் போகர்னா !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget