மேலும் அறிய

வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

எடப்பாடியார் கருத்தை மதிப்பதில்லை என்று அவதார புருஷர் போல  போல முதலமைச்சர் பேசக்கூடாது - ஆர்.பி.உதயகுமார்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் 14 மாவட்டத்தைச் சேர்ந்த 1.50 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
 
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,”தமிழ்நாட்டிலேயே இன்றைக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பேரழிவை ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு 14 மாவட்டங்களில் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து தனி தீவுகளாக காட்சியளிக்க கூடிய ஒரு அவலத்தை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டை கருத்தில் கொள்ளாமல் ஏதோ இவர் மட்டும்தான் இந்த தமிழ்நாட்டை காக்க பிறந்த அவதார புருஷர் போலவும், இன்றைக்கு அவர் செய்வது தான் சரி என்பது போல செயல்படுகிறார். 14 மாவட்டங்களில் ஏறத்தாழ 69-லட்சம் குடும்பங்கள், ஒன்றரை கோடி பேர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை ,நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருந்து இல்லை, உணவு இல்லை இதனால் நிவாரண முகாமுக்கு மக்கள் செல்ல தயாராக இல்லை.
 

முதலமைச்சரே தெரிவித்து இருக்கிறார்கள்

 
பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழையால் 2416 குடிசை வீடுகள், 720 வீடுகள் சேதம், 12 பேர் பலி, 963 கால்நடைகள் பலி,  தண்ணீரில் 5.21 லட்சம் ஏக்கர் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மூழ்கி இருக்கின்றன, ஏறத்தாழ 9576 கிலோ மீட்டர் நீளம் சாலைகள் சேதமடைந்து இருக்கின்றன, 1847 சிறுபாலங்கள், 417 குளங்கள், 1649 கிலோ மீட்டர் மின் கடத்திகள், 23,664 மின் கம்பங்கள், 997 மின் மாற்றிகள், 1650 ஊராட்சி கட்டிடங்கள், 4650 அங்கன்வாடி மையங்கள், 205 சுகாதார நிலையங்கள், 5936 பள்ளிக்கட்டிங்கள், 381 சமுதாயக்கூடங்கள் 623 குடிநீர் வழங்கிய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரே தெரிவித்து இருக்கிறார்கள்.
 

யாரிடம் யாசகம் கேட்கவில்லை.

 
சென்னையில் பெய்த 7 சென்டிமீட்டர் மழைக்கு நீங்கள் போட்டோக்கு போஸ் கொடுக்க பில்டப் காட்டினீர்கள், அதேநேரம் ஊத்தங்கரையில் அதிக அளவில் மழை பெய்து வாகனங்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டது முன்கூட்டியே அவர்களுக்கு தகவல் சொல்ல நாதியில்லை, பல இடங்களில் உணவு இல்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை.அரசின் கவனத்திற்கு நாங்கள் ஏற்கனவே பெற்ற அனுபவத்தில் இருந்து எடுத்து சொல்கிறோம், இன்னைக்கு நீங்கள் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செல்கிறீர்கள் இதே அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல் முதலில் சென்ற முதலமைச்சர் எடப்பாடியார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் பதவி என்பது பொதுவான பதவி, நாங்கள் யாரிடம் யாசகம் கேட்கவில்லை. ஆற்ற வேண்டிய கடமையை எடுத்து கூறுகிறோம் ஆனால் வரம்பு மீறி பேசுகிறீர்கள். ஆனால் காலத்தில் காணாமல் போய்விடும் எங்களால் வரம்பு மீறி பேச முடியும்.
 

மக்களை காட்ட வேண்டும்

இன்றைக்கு குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல  காவல்துறை அலுவலகங்கள், மருத்துவமனை, ஏன் மாவட்ட ஆட்சி அலுவலகமே தண்ணீரில் மூழ்கி போய் உள்ளது. சென்னையில் 7 சென்டிமீட்டர் பெய்த மழையில் அதிமுக அலுவலத்தில் தண்ணீர் வந்துவிட்டது. ஆனால் சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை என்று முதலமைச்சர் பதில் கூறுகிறார். ஆனால் மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறார். ஆனால் இன்றைக்கு மத்திய அரசிடம் 14 மாவட்டங்கள் பாதித்ததாக புள்ளி விவரத்தை கூறி உள்ளீர்கள். உங்கள் பணியை மக்கள் பார்க்கிறார்கள், எடப்பாடியார் ஆற்றும் பணியை மக்கள் பார்க்கிறார்கள் இனிமேல் வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு களத்தில் மக்கள் காக்க பாதுகாப்பு பணியில் ஈடுபடுங்கள்” என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
குழந்தைகள், பெண்கள், பொது மக்களின் பாதுகாப்பு கானல் நீராக காட்சியளிக்கிறது - ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் !
அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget