![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madurai Court: சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் வழக்கு; ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
![Madurai Court: சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் வழக்கு; ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு Ramanathapuram Chakarkottai case seeking order to prevent waste water and garbage dumping in Periya Kanmai Madurai Court: சக்கரக்கோட்டை பெரிய கண்மாய் வழக்கு; ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சக்கரக்கோட்டையை சேர்ந்த அப்துல் ரகுமான் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்
ராமநாதபுரம் அருகில் அமைந்துள்ளது சக்கரக்கோட்டை கிராமத்தில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இந்த கண்மாய் முக்கியமான நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் நகர் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் அனைத்தும் சக்கரக்கோட்டை கிராமம் உள்ள பெரிய கண்மாய் அருகே கொட்டப்படுகிறது. இதனால் பெரிய கண்மாய் முழுவதுமாக மாசடைந்து வருகிறது. மேலும் மாசு கலந்து தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கண்மாயில் கழிவுநீர் கலப்பு
மேலும் ஜோதிநகர், நேரு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலின் கழிவு நீர் தொழுகை பள்ளிவாசல் அருகில் தேங்கி உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல விதமான தொற்று நோய்க்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ராமநாதபுரத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவில்லை. மழைக்காலங்களில் வெள்ள நீர் ஏற்பட்டு தண்ணீர் திறக்கப்பட்ட போது கழிவுகள் அனைத்தும் விவசாய நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே ராமநாதபுரத்தில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் கண்மாயில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதைப் படிக மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Election Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் - ரூ.1 லட்சம் நிதியுதவி
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Khushbu Sundar - BJP : கற்பு, சேரி, பிச்சை… குஷ்புவை சுற்றிச்சுழலும் சர்ச்சைப் பேச்சுக்கள்.. ஒரு ரிவைண்ட்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)