மேலும் அறிய

Madurai: மதுரை கள்ளழகர் ஆடித்தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டி, தாங்கள் விளைவித்த நெல், உள்ளிட்ட பல்வேறு தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபடுவர் என்பது குறிப்பிடதக்கது.

அழகர்கோயில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோயில் தேரோட்டம் வெகு சிறப்பாக தொடக்கம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை முட்டும் வகையில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
 
கள்ளழகர் திருக்கோயில்
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், தென் வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாக அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் திகழ்ந்து வருகின்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், சித்திரை மாதம் வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் ஶ்ரீ கள்ளழகர் எழுந்தருளும் சித்திரை திருவிழாவும், ஆடி மாத பௌர்ணமியை யொட்டி நடைபெறும், திருத் தேரோட்டமும் முக்கிய திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 
 
120 அடி நீளம் கொண்ட திருத்தேர்
 
தினமும், சுவாமி ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைப்பெறுவதைத்யொட்டி, உற்சவ மூர்த்தியான ஶ்ரீ கள்ளழகர் மற்றும் ஶ்ரீதேவி,பூதேவியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் வண்ண திரைத்துணிகளால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயரம் கொண்ட திருத்தேரில் ஶ்ரீ கள்ளழகர் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியருடன் சமேதராக எழுந்தருளப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கிராம நாட்டார்கள் மற்றும் உபயதாரர்கள் வெள்ளை வீசியதைத் தொடர்ந்து, கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கோவிந்தா கோவிந்தா என்று விண்ணை முட்டும் வகையில் கோஷத்துடன், 120 அடி நீளம் கொண்ட திருத்தேர் வடத்தை பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.
 
தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபாடு
 
இந்த, திருத்தேரோட்டதையொட்டி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தல் பேரில், திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் கலைவாணன் தலைமையில் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பறை, மருத்துவ உதவி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், இந்த ஆடிப் பெருந்திருவிழாவில், தென் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்துக் கொள்ளும் நிலையில், தங்களது பகுதியில் மழை பொழிந்து, விவசாயம் செழிக்க வேண்டி, தாங்கள் விளைவித்த நெல், உள்ளிட்ட பல்வேறு தானியங்களை திருக்கோயிலில் செலுத்தி வழிபடுவர் என்பது குறிப்பிடதக்கது.
 
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேனியில் இன்று (03-06-26) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் இதோ!
தேனியில் இன்று (03-06-26) மின் தடை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு விவரம் இதோ!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
தொண்டர்களுக்கு மதிப்பளித்து அதிமுக வலிமை பெற தலைவர்கள் செயல்பட வேண்டும் - செல்லூர் ராஜு !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Embed widget