மேலும் அறிய

தனி நாடாகிறதா கேரளா? பினராயி விஜயன் செய்த சம்பவம்.. ஷாக்கான பாஜக!

கேரளாவில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வாசுகிக்கு கூடுதலாக வெளி விவகாரங்கள் ஒத்துழைப்பு என்ற துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் முக்கியமான துறை வெளியுறவு அமைச்சகம். நாட்டின் வெளியுறவு கொள்கையை வடிவமைப்பது முதல் வெளி விவகாரங்களை கவனிப்பது வரை அனைத்துமே வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

வெளியுறவு போன்று பாதுகாப்பு, விமான போக்குவரத்து, பெட்ரோலியம், துறைமுகம் உள்ளிட்டவை மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. மேல்குறிப்பிட்ட விவகாரங்களில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது. இப்படியிருக்க, வரலாற்றில் முதல்முறையாக மாநிலம் ஒன்றுக்கு வெளியுறவு செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கே. வாசுகி, கூடுதலாக வெளி விவகாரங்கள் ஒத்துழைப்பு துறையை கவனிப்பார் என இந்த வாரத்தின் தொடக்கத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதுகுறித்து கடந்த 15ஆம் தேதி, வெளியான அரசு அறிவிப்பில், "தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் டாக்டர். கே வாசுகி ஐஏஎஸ், வெளிநாட்டு விவகாரங்கள் ஒத்துழைப்புடன் தொடர்புடைய விஷயங்களை கூடுதலாக கவனிப்பார்.

தற்போது வகிக்கும் பொறுப்புகளுடன் சேர்த்து இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸில் உள்ள குடியுரிமை ஆணையர் வெளிவிவகாரங்கள் ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களில் வாசுகிக்கு ஆதரவாக இருப்பார். வெளியுறவு அமைச்சகம், தூதரகங்கள் மற்றும் தூதரகங்களுடன் தொடர்புகொள்வார் என்றும் கேரள அரசு தெரிவித்திருந்தது.

ஒரு மாநில அரசு, வெளிவிவகாரங்களுக்கு என ஒரு செயலாளரை எப்படி நியமிக்க முடியும் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசு மீது பாஜக மாநில தலைவர் கே. சுரேந்திரன் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.

"இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு வெளி விவகாரங்களில் தலையிட எந்த அதிகாரமும்  இல்லை. இது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கை. ஆபத்தான முன்னுதாரணம் ஆகும். கேரளாவை தனி நாடாக அமைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் முயற்சி செய்கிறாரா?" என கே. சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் வெளிவிவகாரங்கள் துறை இணைச்சருமான சசி தரூர், "உண்மை என்னவென்றால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் வெளி விவகாரங்கள் உள்ளன. எந்த மாநில அரசும் சுதந்திரமான வெளியுறவுகளை கொண்டிருக்க முடியாது. 

ஆனால், மாநில அரசுகள் தங்கள் குடிமக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களின் உதவி இல்லாமல் வெளிநாடுகளை தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget