மேலும் அறிய

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தியான மண்டபம்: பக்தர்கள் தியானம் செய்ய தடை ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட் டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் பூட்டி வைத்து உள்ள தியான மண்டபத்தினை, பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய பொதுநல மனு மீதான விசாரணையில், மனுதாரரின் மனு குறித்து, மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயில்
 
மதுரையில் உள்ள மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் பூட்டி வைத்து உள்ள தியான மண்டபத்தினை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மனுத்தாக்கல்
 
மதுரை மேலூர் பகுதியை  சேர்ந்த வீ.கருப்பு தாக்கல் செய்த பொது நல மனுவில்...,” மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலானது உலக புகழ்பெற்ற திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலுக்குள் தியான மண்டபம் ஒன்று உள்ளது. இத்தியான மண்டபத்தில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்து வந்தனர். இத்தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்வதை பக்தர்கள் தொன்றுதொட்டு காலம்காலமாக செய்து வந்தனர். இந்த சூழ்நிலையில் சில ஆண்டுகளாக இத்தியான மண்டபத்தில் பலவிதமான மரப்பொருட்களையும் இரும்பு கம்பிகளையும் வைத்து பக்தர்கள் தியானம் செய்ய முடியாத வகையில் பூட்டி வைத்துள்ளனர். மேலும் பக்தர்கள் இத்தியான மண்டபத்தில் தியானம் செய்ய அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. இது பக்தர்களின் மனதினை புண்படுத்தும் செயலாகும். தியான மண்டபம் உள்ளே அடைத்து வைத்துள்ள மரம், இரும்பு மற்றும் வேண்டாத பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தியும், பக்தர்கள் தியான மண்டபத்தினுள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
 
வழக்கு ஒத்திவைப்பு
 
இந்த மனு நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  பழைய பொருட்களை, தியான மண்டபத்தில் போட்டு வைத்தது ஏன்?. கோயில் வளாகத்தில் வேறு ஒரு இடத்தில் குடோன் அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, மனுதாரரின் மனு குறித்து, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில், இணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Embed widget