![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கஞ்சா விற்பனை, கடத்தல்..குறிவைக்கப்படும் 2 கிராமங்கள்-காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம்
குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது இரண்டு கிராமங்களை குறிவைத்து மர்மநபர்கள் செயல்படுவது போல் தெரிய வருகிறது.
![கஞ்சா விற்பனை, கடத்தல்..குறிவைக்கப்படும் 2 கிராமங்கள்-காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம் Madurai high court Petition to establish Social Security Committee to prevent crimes including sale and smuggling of ganja - TNN கஞ்சா விற்பனை, கடத்தல்..குறிவைக்கப்படும் 2 கிராமங்கள்-காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/d5d28d618cf0d0c0ac02b57ca5141398_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க சமூக பாதுகாப்புக்குழு ஏற்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் காவல்துறை தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த தங்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி மாவட்டம் புத்தானாம்பட்டி, அபினிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், முக்கிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதிகளில் தொடர்ச்சியாக நகை திருட்டு, வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாகவும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அடுத்தடுத்தும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது இரண்டு கிராமங்களை குறிவைத்து மர்மநபர்கள் செயல்படுவது போல் தெரிய வருகிறது.
இங்கு காவல்நிலையம் மற்றும் காவலர்கள் ரோந்து செல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே புத்தனாம்பட்டி கிராமத்தில் காவல்நிலையம் மற்றும் கஞ்சா தொடர்பான குற்றங்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமூகபாதுகாப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். எனவே தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் புத்தனாம்பட்டி கிராமத்தில் துணைக்காவல்நிலையம் அமைக்க வேண்டும், குற்றங்களை கட்டுப்படுத்த சமூக பாதுகாப்புக்குழு ஏற்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுகுறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)