மேலும் அறிய

Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்

பாட்டில்கள், கேன்களில் குடிநீர் விற்கும் நிறுவனங்கள், 2026 ஜனவரி 1 முதல் புதிய தரப்பரிசோதனை விதிகளை பின்பற்றுவது கட்டாயம் என FSSAI எனும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

2026 ஜனவரி 1-ம் தேதி முதல், புதிய தரப் பரிசோதனை விதிகளை, பாட்டில்கள், கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் பின்பற்றுவது கட்டாயம் என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை குறித்து தற்போது பார்க்கலாம்.

BIS சான்றிதழுக்கு பதிலாக புதிய தரப் பரிசோதனை முறை

இந்தியாவில் தற்போது, பாட்டில்கள் மற்றும் கேன்களில் குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய தர நிர்ணய அமைப்பிடம் பி.ஐ.எஸ்.,(BIS) சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையிடம் இருந்து விற்பனைக்கான உரிமத்தை பெறுவது கட்டாயமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு, பி.ஐ.எஸ்., சான்றிதழ் கட்டாயம் என்பதை நீக்கியதோடு, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர், மினரல் வாட்டர் ஆகியவற்றை, அதிக ஆபத்துமிக்க தயாரிப்பு பிரிவாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,(FSSAI) வகைப்படுத்தி இருந்தது.

இந்த சூழ்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட உத்தரவில், பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப் பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயமாகிறது எனவும் கூறியுள்ளது.

புதிய விதிமுறை என்ன சொல்கிறது.?

இந்திய சந்தைகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், குடிநீரின் தரம், பாதுகாப்பு மற்றும் அதில் உள்ள தாதுப் பொருட்களின் அளவை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., நிர்ணயித்துள்ளது. அதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் தொடர்பான அளவீடுகளை, மாதம் ஒருமுறை கட்டாயம் பரிசோதிப்பதோடு, பிற அளவீடுகளை, 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது.

மேலும், உணவு சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், 2 ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்களை பெறத் தேவையில்லை என்ற அரசின் உத்தரவுக்கு இணங்க, பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, குடிநீர் நிறுவனங்கள், இனி எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் மட்டும் பெற்றால் போதுமானது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குடிநீருக்கு உரிமம் பெறுவது எளிதாக்கப்பட்டாலும், தரக் கட்டுப்பாட்டில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. இதன் மூலம், இனி குடிநீர் ஆலைகளில் கூடுதல் கண்காணிப்பும், கடுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.

உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் என்னென்ன.?

  • குடிநீரில் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுயிரிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ஆய்வக சோதனை செய்ய வேண்டும்.
  • தண்ணீரில் கதிர்வீச்சு துகள்கள்(Radioactive residues) கண்டறியப்பட்டால், அந்த நீர் ஆதாரத்தை பயன்படுத்துவது உடனடியாக தடை செய்யப்படும்.
  • விற்பனைக்கு சென்ற பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவிடப்படும்.
  • நிலத்தடி நீர் அல்லது பயன்படுத்தப்படும் மூல நீரை(Raw water), அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும்.
  • குடிநீர் ஆலைகள் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு(Auditing) உட்படுத்தப்படுவதுடன், திடீர் சோதனைகளும் நடத்தப்படும்.

 

 

தலைப்பு செய்திகள்

Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
Embed widget