மேலும் அறிய

ஒரு கோடியே 17 லட்சம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தர மனு ; ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

மத்திய அரசால் ரூ.500,1000 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது திருப்பி செலுத்த இயலாத நிலையில் தன்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு.
 
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் 
 
மதுரை சேர்ந்த அஜய் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நான் பருத்தி பஞ்சு மற்றும் நூலை  நூற்பாலைகளில் இருந்து பெற்று வேறு தொழிலகங்களுக்கு அதனை விற்பனை செய்து வருகிறேன். ஆண்டுதோறும் முறையாக வருமான வரியை செலுத்துகிறேன். கடந்த 2016 -ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஒன்றிய  அரசு செய்தது. 2016 டிசம்பர் 30-ம் தேதிக்குள்ளாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி திருப்பூர் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை மாற்ற சென்றேன். அங்கு ஏற்கனவே நிறைய நபர்கள் வரிசையில் இருந்ததால், நானும் வரிசையில் காத்திருந்தேன். சுமார் 04.30 மணி அளவில் வங்கியின் மேலாளர் சர்வர் பழுதாகிவிட்டதாகவும், இது தொடர்பாக மத்திய அரசிடம் குறிப்பிட்டு வரிசையில் காத்திருந்தவர்களுக்கு கால அவகாசம் பெற்று தருவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. 
 
உச்சநீதிமன்றம் தகவல்
 
தொடர்ச்சியாக பலமுறை ரிசர்வ் வங்கிக்கு இது தொடர்பாக மனு அனுப்பிய நிலையில், எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இதனால் நூல் வாங்கிய நிறுவனத்திற்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் அவர்கள் என் மீது கீழமை நீதிமன்றத்தில் குற்ற வழக்கினை தாக்கல் செய்திருக்கிறார்கள். என் மீது இரண்டு குற்ற வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அது தொடர்பான நிவாரணம் கோரி சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே   என்னிடமுள்ள ஒரு கோடியே 17 லட்சத்தை வங்கி ஏற்க மறுத்தால் என்னால் பிற நிறுவனங்களுக்கு தொகையை திருப்பி செலுத்த இயலாது.  ஆகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது திருப்பி செலுத்த இயலாத நிலையில் என்னிடம் இருக்கும் ஒரு கோடியே 17 லட்ச ரூபாயை மீண்டும் ஏற்க தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
 
இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 500, 1000 ரூபாயை மாற்ற முயற்சித்த அனைத்தும் ஆதாரங்கள் கொண்ட  மனுக்களையும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

TN Police vs TNSTC : காவல்துறை vs போக்குவரத்து துறைவலுக்கும் மோதல்? ’’பழிக்குப்பழியா?’’Prashant Kishor Angry : ’’வீடியோ ஆதாரம் இருக்கா?’’பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!வாக்குவாதமான நேர்காணல்Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
CM Stalin: பிரச்னைக்கு தீர்வு காணும் வரை சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கூடாது - தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்!
"மாடு இன்னும் பாலே தரல.. ஆனா, நெய்க்கு சண்டை போடுறாங்க" INDIA கூட்டணி மீது பிரதமர் மோடி தாக்கு!
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Planet Parade 2024: ஜுன் 3ல் வானில் மாயாஜாலம் - நேர்க்கோட்டில் வரப்போகும் 6 கோள்கள் - கண்களால் பார்க்கும் வாய்ப்பு
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Saamaniyan Movie Review: 12 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்! மனதை வென்றதா ராமராஜனின் சாமானியன்? - முழு விமர்சனம்!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
Turbo Movie Review: பீஸ்ட் மோடில் மம்மூட்டி..தெறிக்கவிடும் ஆக்‌ஷன் காட்சிகள்..டர்போ படத்தின் விமர்சனம் இதோ!
"பொறுமையை சோதிக்க வேண்டாம்" பாலியல் வீடியோ விவகாரத்தில் பேரன் பிரஜ்வலுக்கு தேவகவுடா எச்சரிக்கை!
TN CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்; விரைவில் சென்னையில் கூகுள் பிக்சல் கம்பெனி!
Thiruvalluvar: காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
காவி உடையில் திருவள்ளுவர்.. ஆளுநர் மாளிகை அழைப்பிதழால் மீண்டும் சர்ச்சை.. என்ன மேட்டர்?
Embed widget