மேலும் அறிய

Madurai: அமலாக்கத்துறை அதிகாரி ஜாமீன் வழக்கு; விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு

அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட வேண்டும் என கால அவகாசம் கூறியதால் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இச்சூழலில், டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் இதிலிருந்து அவரை காப்பாற்றுவதாகவும் கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் அங்கிட் திவாரி. இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார். மீதித் தொகையை  டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில் அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை வைத்தனர். அந்த காரை எடுத்து அவர் செல்ல முயன்ற போது அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால், அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார்.

Tamil Nadu anti corruption officials rushes to ED office after ED officer caught accepting bribe red handed ED Officer: மதுரை ED அலுவலகத்தில் ரெய்டு.. கைதான அமலாக்கத்துறை அதிகாரி.. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரை திண்டுக்கல் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்துள்ளதுடன். அவரிடம் இருந்து 20 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி பின் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அங்கித்திவாரியை மூன்று நாள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்து மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்று தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளார். 

Madurai: அமலாக்கத்துறை அதிகாரி  ஜாமீன் வழக்கு; விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு
 
கடந்த வாரம் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டு என்றும் மேலும் புகார் கொடுத்த மருத்துவருக்கு எதிராக அமலாக்க துறையில் எந்த வழக்கும் இல்லை அவ்வாறு இருக்கும் போது இந்த வழக்கிற்கு முகாந்திரம் இல்லை மருத்துவருக்கு எதிரான எந்த வழக்கும் இல்லாத நிலையில் அதனை முடிப்பதற்கு எவ்வாறு லஞ்சம் கேட்க முடியும். மேலும் அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டவுடன் அவரது வீடு அவரது அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்துள்ளனர. அதில் எந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை அவரது மொபைல் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற பல்வேறு உத்தரவுகள் படி இந்த கைது என்பது  விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே கைது செய்யப்பட்டு 15 தினங்களாக சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் முறையாக பின்பற்றுவோம் எனக்கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
 

Madurai: அமலாக்கத்துறை அதிகாரி  ஜாமீன் வழக்கு; விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு
 
இந்த மனு நேற்று நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டி உள்ளது என்றும், மேலும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு கால அவகாசம் கோரினர். அப்போது அங்கித் திவாரி தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதி செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget