மேலும் அறிய

Crime: டீ கடைக்காரரை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் - மதுரையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது

மதுரையில் டீ கடைக்காரரை கடத்தி 40 லட்சம் ரூபாய்  கேட்டு மிரட்டிய கூலிப்படையை சேர்ந்த 3 பேரை கைது செய்த கூடல்புதூர் காவல்துறையினர்.

காவல்துறையினர் செல்போன் எண் டவரை பாலோ செய்து மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே இருப்பதாக தெரியவந்துள்ளது. 
 
 
டீ கடை உரிமையாளர் கடத்தல்
 
மதுரை மாநகர் கூடல்நகர் அருகேயுள்ள சொக்கலிங்க நகர் முதல் தெரு பகுதியில் வசித்துவருபவர் பழனிச்சாமி (59). இவர் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் சிலருக்கு பைனான்ஸ் கொடுத்தும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பழனிச்சாமி டீ கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காரில் காத்திருந்த சிலர் முகவரி விசாரிப்பது போல அருகே சென்று கண் இமைக்கும் நேரத்தில் பழனிச்சாமியை காரில் கடத்தி சென்றுள்ளனர். அப்போது பழனிச்சாமி கூச்சலிட்ட நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பழனிச்சாமியின் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர்.


Crime: டீ கடைக்காரரை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் - மதுரையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது
 
பணம் கேட்டு மிரட்டல்
 
பின்னர் சிறிது நேரத்திலேயே கடத்தல்காரர்கள் பழனிச்சாமியின் மகனின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு பழனிசாமியின் இரு மகன்களிடம் 40 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உங்கள் தந்தையை விடுவோம் என கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமியின் மகன்கள் கூடல்புதூர் காவல்நிலையத்தில் தந்தை கடத்தப்பட்டதாக புகார் அளித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து பழனிச்சாமியின் மகன்களிடம் கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது காவல்துறையினர் செல்போன் எண் டவரை பாலோ செய்து மதுரை மாவட்டம் குருவித்துறை அருகே இருப்பதாக தெரியவந்துள்ளது. 

Crime: டீ கடைக்காரரை கடத்தி ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் - மதுரையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் கைது
 
கடத்தல்காரர்கள் கைது
 
இதனையடுத்து அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் பழனிச்சாமியை விட்டுவிட்டு தப்பித்து ஓடினர். இதனையடுத்து காவல்துறையினர் பழனிச்சாமியை மீட்ட நிலையில் தப்பியோடிய கடத்தல்காரர்களான தேனி மாவட்டம் மயிலாடும்பாறையைச் சேர்ந்த குணசேகர், சுதாகர், மணிகண்டன் ஆகிய மூவரை கைது செய்த நிலையில் தப்பியோடிய மற்ற மூவரையும் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்திற்காக கடத்தப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கடத்தப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. கைதான 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget