மேலும் அறிய

மதுரை : முழுக் கொள்ளளவை எட்டியதா அணை? வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !

கரையோர பகுதி மக்கள் குளிக்கவோ, கரையோரங்களுக்கு செல்லவோ , கால்நடைகளை அழைத்துசெல்லவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளான முல்லைப்பெரியாறு அணை, தேக்கடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  தற்போது 136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. முல்லைப்பெரியாற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 139 கன அடியாகவும், நீர்மட்டம் 133.80 அடியாகவும் இருந்தது.  இந்நிலையில் கடந்த 25ம் தேதி அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 875 கனஅடியாக உள்ளது.
 
 
Mullaperiyar Dam with southwest monsoon intensity reaching 136 feet.
அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடிதண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 5 ஆயிரத்து 929 மில்லியன் கன அடி நீர் இருப்பானது இருந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 10.4 மி.மீ, தேக்கடியில் 10 மி.மீ மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் வரத்து அதிகரிப்பாலும் 136 அடிக்கும் மேல் உயர்ந்து வருவதாலும் தமிழக பொதுப்பணித்துறை சார்பாக முதல் எச்சரிக்கை தகவலை கேரளா இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது.

மதுரை : முழுக் கொள்ளளவை எட்டியதா அணை? வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !
இந்நிலையில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து திறக்கப்பட்ட நீர் மதுரையை வந்தடைந்தது, தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக  71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியுள்ள நிலையில் நேற்று முன்தினம் அணையிலிருந்து நீரானது திறக்கப்பட்டது.  அணை நிரம்பியதன் காரணமாக அணைக்கு வரக்கூடிய நீர் முழுமையாக 1750 கன அடி வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் திறக்கப்பட்ட நீரானது நேற்று மதுரை வைகை ஆற்று பகுதிக்கு வர தொடங்கியுள்ளது. இதனையடுத்து கரையோர பகுதி மக்கள் குளிக்கவோ, கரையோரங்களுக்கு செல்லவோ , கால்நடைகளை அழைத்துசெல்லவோ கூடாது என வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது

மதுரை : முழுக் கொள்ளளவை எட்டியதா அணை? வைகை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !
மேலும் வைகை ஆற்று நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் அருகே ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறக்கப்படும் நீரானது தங்குதடையின்றி செல்லும் வகையில் ஆகாயதாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கிய நிலையில் தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. ஏற்கனவே மூன்று கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரானது மதுரை வந்தடைந்தது குறிப்பிடதக்கது.
 

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget