மேலும் அறிய

Madurai: முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டி நடுவே இரு அணிகள் மோதலால் பரபரப்பு

சென்னை வீரர்கள் பரிசு பெற்ற போது கோவை அணியினரின் தான் உண்மையான வெற்றியாளர்கள் எனவும், நயன்தாரா என முழக்கம் எழுப்பிய வீராங்கனைகளால் பரபரப்பு.

மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டியின் நடுவே இரு அணியினரும் ஒருவொருக்கொருவர்  மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி
 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.  இதில்  தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் மற்றும் 456 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில்  நடைபெற்ற இறுதி போட்டியினை, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா  நிறைவு போட்டியினை தொடங்கிவைத்தார். இறுதி போட்டியில் கோவை - சென்னை அணிகள் இடையே போட்டி நடைபெற்றுகொண்டிருந்தபோது நடுவர்கள் ஒருதலைபட்சமாக சென்னை அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி தொடர்ந்து கோவை அணியினர் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்தனர் . இதனையடுத்து போட்டி நடைபெறும் இடத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் போட்டி நடைபெற்றது.
 
போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து இறுதி போட்டியின் கடைசி 40நொடிகளில் விளையாடி கொண்டிருந்தபோது இரு அணி வீரர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிறிய  அளவிலான மோதலாக மாறியது இதனையடுத்து காவல்துறை இரு தரப்பையும் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இறுதிபோட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை தங்கப்பதக்கமும், கோயம்புத்தூர் வெள்ளிப்பதக்கமும், ஈரோடு வெண்கலப்பதக்கமும் அறிவிக்கப்பட்டது. இதேபோன்று பெண்கள் பிரிவில் சிவகங்கை தங்கப்பதக்கமும், கிருஷ்ணகிரி வெள்ளிப்பதக்கமும், கன்னியாகுமரி வெண்கலப்பதக்கமும்  வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
போட்டியில் குளறுபடி
 
இதை தொடர்ந்து ஆண்கள் பிரிவினருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பரிசுகளை வழங்கிசென்றனர். அப்போது முதல் இடத்தை பிடித்த சென்னை அணியினர் பரிசுகளை பெற்றபோது, கோயம்பத்தூர் மகளிர் அணியைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் திடீரென உண்மையான வெற்றியாளர்கள் கோயம்பத்தூர் அணியினர் என முழக்கங்களை எழுப்பியதோடு திடீரென நயன்தாரா என தொடர்பே இல்லாமல் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழாவில் இதுபோன்று குளறுபடி ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிகாரிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
 
வீராங்கனை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அவரை தூக்கி செல்வதற்கான ஸ்ட்ரக்சர் வசதி இல்லாத நிலையில் அங்கிருந்த சக வீராங்கனைகளே கடும் சிரமத்தோடு மயங்கி விழுந்த வீராங்கனை தூக்கி சென்று முதற்கட்ட சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான இறுதி போட்டியில் இது போன்று அவசர உதவிக்கான ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட முறையாக செய்யவில்லை என கோச்சர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகாரிகளிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
 
அதிகாரிகள் விளக்கம்
 
வீரர்கள் மோதல் தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரியிடம் விளக்கம் கேட்டபோது கோயம்புத்தூர் அணியினர்  போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விதியை மீறி உள்ளே வந்ததால் அவர்கள் டிக்லைன் செய்யப்பட்டதாகவும், மேலும் கோயம்புத்தூர் அணியினர் தொடர்ச்சியாக இதுபோன்று செய்து வருவதாக தகவல் வந்துள்ளது. கோவை அணியினர் அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் தரும் பட்சத்தில் அவர்களுடைய குற்றச்சாட்டு உண்மையான விசாரணை நடத்துவோம் என்றார்.
 
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆணையாளர் அதிரடி ஆய்வு: தூய்மை, சுகாதாரம் உறுதி செய்ய உத்தரவு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: தனித்துவமான வடிகால் அமைப்பு கண்டெடுப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!
சூரி சகோதரர் லட்சுமணன் அண்ணாமலையின் - 'வீ த லீடர்' அமைப்பில் Entry? மதுரை அரசியிலில் பரபரப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget