மேலும் அறிய

”தேர்தல் தோல்விக்கு செத்தா போனார்கள்?” - அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு !

’ஜெயலலிதா தேர்தலில் தோற்றிருந்தால் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள்’ என்றார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பின் அ.தி.மு.க.வில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. அமைதியாக வலம் வந்த அமைச்சர்கள் கூட தங்கள் வாயால் மக்களிடம் திட்டுக்களுக்கு ஆளாகினர். தற்போது நடந்து முடிந்த தேர்தலுக்கு பின் அ.தி.மு.க சற்று அமைதியாக இருந்துவருகிறது. இந்நிலையில் '2021' சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா  தோற்றிருந்தால் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருப்பார்கள், ஆனால் தற்போதைய தோல்விக்கு யாரும் தூக்கிட்டு செத்திருக்கிறார்களா? என அன்வர் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

”தேர்தல் தோல்விக்கு செத்தா போனார்கள்?” - அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு !
 
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் மஹால் ஒன்றில் அ.தி.மு.க சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி., அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா தொண்டர்களிடம் பேசுகையில், " கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது பிரச்சாரத்தில் ஜெயலலிதா  பெயரை சொல்கிறார்களா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சொல்கிறார்களா? என்று தான் உற்று கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்ல மறந்தால், அவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள்.

”தேர்தல் தோல்விக்கு செத்தா போனார்கள்?” - அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு !
இந்த தேர்தலில் மற்றும் பல இடங்களில் அதுதான் நடந்துள்ளது. ஆனாலும் இத்தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டோம். ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்றபோது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே  வெற்றிபெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறார்களா?. என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.
 

”தேர்தல் தோல்விக்கு செத்தா போனார்கள்?” - அன்வர் ராஜா சர்ச்சை பேச்சு !
இராமநாதபுரம் மாவட்டம் தொடர்பான கட்டுரைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
 
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அன்வர் ராஜா தேர்தலுக்கு பின் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்களின் உயிரை பணயம் வைப்பதுபோல் பேசிய சர்ச்சை பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்துள்ளது. தென் மண்டலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், ஜி.பாஸ்கரன் வரிசையில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா வர நினைக்கிறாரோ என பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
சிவகங்கை எல்லையில் கிராவல் மண் கொள்ளை: விவசாயம் அழிகிறது, நடவடிக்கை எங்கே?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு: விசாரணை சரியில்லையெனில் மாற்றுவோம் - உயர்நீதிமன்றம் !
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
சிறைகளில் பாதுகாப்பு இல்லை: 10,581 கைதிகள் சிகிச்சைக்காக காத்திருப்பு - உயர்நீதிமன்றம் கவலை!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!
விருதுநகர் இருக்கண்குடி மீன்பிடி குத்தகை: 5 ஆண்டு ஒப்பந்தப்புள்ளிக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Embed widget