![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திண்டுக்கல்: தனியார் மடத்தில் தீ விபத்து - கார், மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்
வேடசந்தூர் அருகே தனியார் மடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மடத்திற்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட மடத்தில் உள்ள பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தது.
![திண்டுக்கல்: தனியார் மடத்தில் தீ விபத்து - கார், மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம் Dindigul In a fire at a private monastery, a car and a motorcycle belonging to the monastery were burnt and damaged TNN திண்டுக்கல்: தனியார் மடத்தில் தீ விபத்து - கார், மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/18/4f918574207cbaf004a60184314dbcf21666067478112193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தனியார் மடம் ஒன்று உள்ளது. இதை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பின்பு, அவருடைய உறவினர்களான தோப்புபட்டியை சேர்ந்த மருதாம்பாள் (90), அவரது மகள் தனலட்சுமி (60) ஆகியோர் பராமரித்து வருகின்றனர். அந்த மடத்தில் சமையல் கூடம், ஜீவசமாதி கூடம் என்று 2 அறைகள் உள்ளன.
இந்நிலையில் சமையல் கூடத்தில் உள்ள குளிர்பதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டு மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்து எரிந்ததையடுத்து தூங்கி கொண்டிருந்த மருதாம்பாளும், தனலட்சுமியும் பதறியடித்து மடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இண்டிகோ விமானத்தில் பூச்சிகள்.. கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் பகிர்ந்த பரபரப்பு ட்வீட்..
சிறிது நேரத்தில் மடத்தின் மேற்கூரை மீது தீ மளமளவென பரவியது. இதில் மடத்திற்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் தீப்பற்றியது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
அப்போது மடத்தில் சமையல் கூடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதில் மடத்தின் கட்டிடம் இடிந்து சிமெண்டு கற்கள் பறந்து வந்து வெளியே நின்று கொண்டிருந்த மருதாம்பாளின் காலில் விழுந்தது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)