மேலும் அறிய

அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் அசத்தல் !

பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள  வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்  சேர்மன் மாணிக்கவாசகம் நடு நிலைப்பள்ளி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியியான இங்கு தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் மாணவர்களுக்கு கல்வியோடு நாட்டு, நடப்பு, தொழிற்கல்வி, கலைத்துறை என்று பல்வேறு விசயங்களில் கற்றுக் கொடுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார். மாணவர்களுக்கு பிடித்த கல்வியையும் சேர்த்துக் கொடுப்பதால் இந்த பள்ளி மாணவர்கள் பட்டிமன்றம், பண்பலை என பல்வேறு இடங்களுக்கும் சென்று பரிசுகளை தட்டிவருவார்கள். தற்போது கொரோனா இரண்டாவது அலையில் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் அசத்தல் !
 
கொரோன காலத்திலும் வீட்டிலிருந்தபடியே கொரோனா தடுப்பூசி விழிப்புணர் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு  வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின்  பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள். பொதுமக்கள் அனைவரும்   100 சதவிகிதம்   கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  மத்திய,மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் இணையம் வழியாகவும்,அலைபேசி வழியாகவும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அனைவரிடமும் தொடர்பு கொண்டு அதே வகுப்பில் பயிலும் மற்ற மாணவ நண்பர்களின் பெற்றோர்கள் வீட்டு முகவரிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தபால் அட்டை வழியாக  கடிதம் எழுதுமாறு அறிவுரை வழங்கினார்கள் .

அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் அசத்தல் !
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறுகையில்...," சமீபத்தில் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வாங்க பள்ளிக்கு வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடவில்லை என்பதை அவர்களிடம் பேசும்போது அறிந்து கொண்டேன். எனவே பள்ளி மாணவர்களின் வாயிலாகவே அவர்களின் பெற்றோர்களுக்கும், சுற்றுப்புறத்தில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி , அரசின் இலவச கொரோனோ தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து, மாணவர்களை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அஞ்சல் அட்டை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நானும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் , முத்துலெட்சுமி,செல்வமீனாள் ,கருப்பையா ஆகியோரும் கேட்டுக்கொண்டோம்.

அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு; பள்ளி மாணவர்கள் அசத்தல் !
                அஞ்சல் அட்டையில் "தடுப்பூசி போடுவோம்.கொரோனாவை தடுப்போம் . இலவச தடுப்பூசியை இன்முகத்துடன் போட்டுக்கொள்வோம். அரசின் தடுப்பூசியை அனைவரும் பயன்படுத்துவோம் " என்ற வாசகத்தை  எழுதி , தங்களது பெற்றோர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள   வலியுறுத்தினர்.கொரோன காலத்திலும்  இளம் வயது பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதம் .இதனை பொதுமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் தெரிவிக்கவே இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடமும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடமும் இதனை கூறும்போது நல்ல பலன் கிடைக்கும்” என்றார்.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

மதுரை: சாலையில் தொலைந்த பணம்... சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த பெண் காவலர்கள்!
மதுரை: சாலையில் தொலைந்த பணம்... சிசிடிவி உதவியுடன் மீட்டெடுத்த பெண் காவலர்கள்!
மதுரை ஒத்தக்கடை குப்பை மையம்: உயர்நீதிமன்றம் நிபந்தனை அனுமதி!
மதுரை ஒத்தக்கடை குப்பை மையம்: உயர்நீதிமன்றம் நிபந்தனை அனுமதி!
மதுரை காந்தி அருங்காட்சியகம் திறப்பு: ஆகஸ்ட் 15-க்குள் சாத்தியமா? - நீதிபதிகள் கேள்வி
மதுரை காந்தி அருங்காட்சியகம் திறப்பு: ஆகஸ்ட் 15-க்குள் சாத்தியமா? - நீதிபதிகள் கேள்வி
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை: நரம்பை உள்ளே வைத்து தைத்ததால் 15 ஆண்டுகள் ஆசிரியைக்கு நரக வேதனை!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Embed widget