மேலும் அறிய

மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கும் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கல்வெட்டுகளை பிரதிகளைக்கொண்டு ஆவணம் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறு,விறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது.

மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கும் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் இந்த நிலையில் கோவிலின் உள்பிரகாரம், இரண்டாம் பிரகாரம், அம்மன் சந்நிதி, சுவாமி சன்னிதி உள்பட கோயிலுக்குள் பாண்டியர் காலத்தில் பொறிக்கப்பட்ட 410- க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளனர், இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளவற்றை அறிக்கையாக தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையிலான குழுவினர் 3 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றி கல்வெட்டுகள் அனைத்தையும் படித்து அவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை அறிக்கையாகத் தயாரித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கும் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தற்போது வரை அந்த அறிக்கையை கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை.  இந்நிலையில் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளவை குறித்தும் அதற்கு ஆதாரமாகவும்,கோயில் கல்வெட்டுகளை அப்படியே பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தொல்லியல் நிபுணர் சாந்தலிங்கம் தலைமையில் கல்வெட்டியல் நிபுணர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி இரண்டு மாதங்களில் முடிவடையும் என்றும் அதன் பின்னர் கல்வெட்டுகளை பிரதிகளைக்கொண்டு ஆவணம் தயாரிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளை பிரதியெடுக்கும் பணிகள் தொடங்கும் : கோவில் நிர்வாகம் அறிவிப்பு
”கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும் மதுரை. மீனாட்சியம்மன் கோயில்தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல கலை, கலாச்சார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிப்படுத்துகிறது. எனவே மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகள் படியெடுப்பது அதனை மேலும் உறுதிப்படுத்தும்” என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஜடேஜா ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Entertainment Headlines: வசூல் வேட்டையில் கல்கி! தங்கலான் ரிலீஸ் எப்போது? சினிமா செய்திகள் இன்று
Entertainment Headlines: வசூல் வேட்டையில் கல்கி! தங்கலான் ரிலீஸ் எப்போது? சினிமா செய்திகள் இன்று
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
Embed widget