மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
மதுரை மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
![மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள் Citizens paralyzed in burning houses in Madurai; Damage to normal life மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/1d2ed355797c900031769ed18f3ccd0c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெயில்
மதுரை மாவட்ட முழுவதிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக நாள்தோறும் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 103 டிகிரி பாரன்ஹீட் செல்சியஸை தாண்டி வெயிலின் தாக்கமானது அதிகரித்து காணப்படுகிறது.
#hot மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஜில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் குளுமை நீடித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதனை முட்டித்தூக்கும் வகையில் வெயில் கடுமையாக அடித்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு நிலை பாதித்துள்ளது.@SRajaJourno @abpnadu pic.twitter.com/ObmigJatpS
— arunchinna (@arunreporter92) May 17, 2023
இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கக்கூடிய நிலை காணப்படுகிறது. மேலும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உடல் பாதைகளால் பாதிக்கப்பட கூடிய நிலையும் ஏற்பட்டுவருகிறது. வெளியில் வரக்கூடிய குழந்தைகள் , முதியவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகி ஆங்காங்கே மயங்கிவிழும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அனல்காற்று வீசுவதால் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகின்றது. தொடர்ந்து வெப்பத்தின் காரணமாக உடல் முழுவதிலும் கடுமையாக வேர்வை உருவாகி உடல் சோர்வு ஏற்பட்டு பலவீனம் அடையும் நிலை உருவாகி வருகிறது. வெளியில் நடமாடகூடிய பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது பேருந்துகளில் பயணிக்கும் போது கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக பயணத்தையே தவிர்க்கும் நிலையும் உருவாகியுள்ளது.
![மதுரையில் சுட்டெரிக்கும் வெயில்: உயிரை உறியும் அனல்காற்று: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/22/3021ba45211b5807e45b09a6e476dfd5_original.jpg)
அதீத வெயிலின் தாக்கத்தால் ஆங்காங்கே பொதுமக்கள் குளிர்பானங்கள், பழச்சாறுகளை, மோர் போன்றவற்றை குடித்து தாகத்தை தீர்த்துகொள்கின்றனர். அதே போல் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீளும் தலையில் துணிகளை போர்த்தியபடி சென்றுவருகின்றனர். தொடர் வெயிலின் தாக்கத்தால் வெயிலால் உருவாகும் வெப்ப நோய்களாலும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து வீசும் அனல்காற்றால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்திவைத்திருக்கும் நிலையும் உள்ளது. மதுரை மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வெயிலின்தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Watch video: ஆக்ரோசமாக மோதிக்கொண்ட கொம்பன் யானைகள்; சினிமா காட்சிகளை மிஞ்சிய நிஜ சண்டை - வைரல் வீடியோ
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion