மேலும் அறிய

சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..

சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

சிவகங்கை தொல்நடைக் குழுவைச் சேர்ந்த க.சரவணன்  வித்தியாசமான மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக சிவகங்கை தொல்நடைக் குழுவிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா தெரிவிக்கையில், “சிவகங்கையை அருகே உள்ள  அரசனேரி கீழே மேடு பேச்சிக்குளம் முனிக் கோயிலில் மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக என்னிடம் ஒப்படைத்தார். இது செம்பால் செய்யப்பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும் பின்னுமாக இருந்தது.

இதிலுள்ள வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்தது. இக்காசுகள் குறித்த முழுமையான தகவலை தஞ்சை நாணயவியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராமன் அவர்களின் உதவியோடு ஆய்வு செய்ததில் இவை பீஜப்பூர் சுல்தான்கள் காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.
சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..

பீஜப்பூர் சுல்தான்கள்.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராஷ்டிரப் பகுதியையும்  1490 லிருந்து 1686 வரை ஆண்டவர்கள் பீஜப்பூர் சுல்தான்கள், 1490-இல் பாமினி சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தனியரசாக இது செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.

செம்புக்காசுகள்.
 
சங்க காலம் தொட்டே காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் தங்கம் வெள்ளியை அடுத்து பிற்காலத்தில் செம்பால் ஆன காசுகள் ஆட்சியாளர்களால் பெருவாரியாக வெளியிடப் பெற்றன. நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆன தோடு அதிக எடை உள்ளதாக உள்ளன மூன்று காசுகளில் 2 காசுகள் 8 கிராம் எடையும் ஒரு காசு 7 கிராம் எடையுமாக உள்ளன. ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. மன்னரும் காலமும். அலி அடில் ஷா 1558_1579 என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கலாம், இவரது காலம் 16 ஆம் நூற்றாண்டு.

சிவகங்கை : அரசனேரி கீழ மேடு பகுதியில் பிஜப்பூர் சுல்தான் கால நாணயங்கள் கண்டெடுப்பு..
 
வணிகத் தொடர்பு.
 
காசு கிடைக்கப்பெற்ற இந்த பகுதியானது விஜயநகர, நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையங்களாக பிரிக்கப்பெற்ற பகுதியிலும் பின்னர் இராமநாதபுர சேதுபதிகளின் ஆட்சியின் கீழும் 1729 க்குப்பிறகு சிவகங்கை சீமைப் பகுதியிலும் இருந்திருக்கும்  விஜய நகர ,நாயக்கர், சேதுபதி, சசிவர்ணர் ஆகியோரது காசாக இல்லாது அதற்கு முந்தைய மதுரை சுல்தான்கள் காசாகவும் இல்லாது இப்பகுதி ஆளுகைக்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர்பிலோ அல்லது இறைவழிப் பயணத்தின் வழியோ இக்காசு இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.
 
அரிதாய் கிடைத்த காசு.
 
மதுரை, தஞ்சாவூர்,கரூர், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் காசுகள் இழுத்து வரப் பெறுவதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடைபெற்று வந்துள்ளன. ஆனால் சிவகங்கை போன்ற பகுதிகளில் இவ்வாறான காசுகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. மேலும் சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர்... யார் இந்த ப.ஆகாஷ் IAS முழு விவரம் !
மதுரை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர்... யார் இந்த ப.ஆகாஷ் IAS முழு விவரம் !
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... சிறப்பு தொழில் கடன் முகாமில் நீங்களும் பங்கேற்கலாம் - முழு விவரம் !
உலமாக்கள் மானியத் தொகையுடன் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் !
உலமாக்கள் மானியத் தொகையுடன் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் !
மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது !
மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
CM Vijay: அதிமுக-வை ஒரு ஆளாய் கூட மதிக்காத விஜய்! ஆதங்கப்படும் இரட்டை இலை விசுவாசிகள்!
Stalin vs Vaiko : நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
நான் அப்பவே சொன்னேன்.! வைகோவை சேர்க்காதீங்கனு.. இப்ப அனுபவியுங்க - குஷியில் கேஎஸ்ஆர்
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
போலீஸ் ஸ்டேஷனையும் விட்டு வைக்காத தவெகவினர்.! தெறி பட பிஜிஎம் போட்டு ரீல்ஸ்- கதறும் காவலர்கள்
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
VanniArasu: ஆணவ படுகொலைக்கு தனிசட்டம், புது காவல் படை.. TVK அரசு செய்யும் - அமைச்சர் வன்னி அரசு
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
Embed widget