மேலும் அறிய

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்

’’கிராம நிர்வாக அலுவலர்,  ஊர் தலைவர் உள்ளிட்டோர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என உறுதி கூறினால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்’’

காது குத்து, கல்யாணம், கிடாவெட்டு, ஊர் திருவிழா, இறுதிச்சடங்கு என எந்த விழாவாக இருந்தாலும் மது என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. சமூகத்தில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்த வகையான குற்றத்திலும் மதுவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது
 
மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என நீதிபதிகள் கூறியது முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் “இருவர் வசிக்கும் பகுதியில் உள்ள. கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்,  ஊர் தலைவர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால்,  அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 
ஸ்நாக்ஸ் டப்பாவில் பான் மசாலா.. சமையல் கொட்டகையில் சாராயம்.. அச்சுறுத்தும் போதை முறைகள்!
 
திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.  அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக காவல்துறையினரால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்  ,  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் நாங்கள் இனி மேல் மது அருந்த மாட்டோம்.  குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தாக” தெரிவித்தார்

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
அப்போது நீதிபதிகள்,   ”இருவர் மீதும்  பல குற்ற வழக்குகள் இருக்கிறது,  இவரும், மீண்டும் ஜாமீனில் இருந்து வெளியே வந்தால், சமூகத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , அவர்கள் பிரமாண பத்திரத்தை ஏற்று கொள்ள முடியாது. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்,  ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் தலைவர் உள்ளிட்டோர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget