மேலும் அறிய

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்

’’கிராம நிர்வாக அலுவலர்,  ஊர் தலைவர் உள்ளிட்டோர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என உறுதி கூறினால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்’’

காது குத்து, கல்யாணம், கிடாவெட்டு, ஊர் திருவிழா, இறுதிச்சடங்கு என எந்த விழாவாக இருந்தாலும் மது என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. சமூகத்தில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்த வகையான குற்றத்திலும் மதுவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது
 
மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என நீதிபதிகள் கூறியது முக்கியமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விசாரணைக்கு இந்த வழக்கில் நீதிபதிகள் “இருவர் வசிக்கும் பகுதியில் உள்ள. கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கிய பிரமுகர்,  ஊர் தலைவர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால்,  அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 
ஸ்நாக்ஸ் டப்பாவில் பான் மசாலா.. சமையல் கொட்டகையில் சாராயம்.. அச்சுறுத்தும் போதை முறைகள்!
 
திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும்  ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.  அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக காவல்துறையினரால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில்  ,  கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் நாங்கள் இனி மேல் மது அருந்த மாட்டோம்.  குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் என பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தாக” தெரிவித்தார்

மது அருந்தமாட்டோம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும் பிரயோஜனம் இல்லை - செக் வைத்த நீதிமன்றம்
 
அப்போது நீதிபதிகள்,   ”இருவர் மீதும்  பல குற்ற வழக்குகள் இருக்கிறது,  இவரும், மீண்டும் ஜாமீனில் இருந்து வெளியே வந்தால், சமூகத்துக்கு பாதுகாப்பாக இருக்குமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , அவர்கள் பிரமாண பத்திரத்தை ஏற்று கொள்ள முடியாது. அவர் வசிக்கும் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்,  ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் தலைவர் உள்ளிட்டோர் இனி மேல் இந்த இருவரும் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டார்கள் என அவர்கள் உறுதி கூறினால் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
உசிலம்பட்டி அரசியல் அதிரடி: அதிமுக, திமுகவினர் தவெகவில் இணைந்தனர்!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!
ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்: இளம்பெண்கள், தலித்துகளை காக்க முதலமைச்சருக்கு - கதிர் அவசர கோரிக்கை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
Embed widget