மேலும் அறிய

மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் கைது

"பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக உதவி பொறியாளர்  விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை  அகற்ற 10ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் கைது.
மதுரை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மாநகராட்சி 56- வது வார்டு பகுதியில் வசிக்கும்  கணேசன் என்பவர் தனது வீட்டின் முன்பாக நீண்ட நாட்களாக  கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்காத நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கழிவுநீர் தனது வீட்டின் முன்பாக தேங்கி இருப்பதால் கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர்  விஜயகுமார் வீட்டின் முன்பாக தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்ற  பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
 

மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் கைது
 
இதுகுறித்து கணேசன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து 56- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக உதவிப் பொறியாளர்  விஜயகுமார் பெற்றபோது மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
 
மதுரை மாநகராட்சியின் உதவிப் பொறியாளர் லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டது மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வீட்டின் முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப்பொறியாளர் கைது
 
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் தெரிவிக்கையில், ”மதுரை மாநகாராட்சியில் தற்போது அல்ல, பல வருட காலமாக லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர்கள் சிலர் தைரியமாக முன் வரும்போது மட்டுமே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாநகராட்சியில் பலரும் தங்களது பணிகளை விரைவாக முடித்துக்கொள்ளவேண்டும் என்று லஞ்சத்தை கொடுக்கின்றனர். சிலருக்கு மாநகராட்சியில் அதிக அளவு லாபம் கிடைப்பதால் தங்கள் பணிக்கு லஞ்சக்கணக்கில் லஞ்சம் கொடுப்பதாகவும் புகார்கள் உள்ளது. எனவே தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை கண்காணித்து, சட்ட விரோதமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதே போல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் தடுக்க புகார் பெட்டி ஒன்றை வைத்து அதில் பொதுமக்களிடம் ரகசிய புகார்கள் பெறவேண்டும். அப்போது பல தவறுகள் வெளிச்சத்திற்கு வரும்” என்றனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Breaking News LIVE : பழைய குற்றால அருவி நிர்வாகத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Thanthi 1: அப்படி போடு! மேலும் ஒரு பொழுதுபோக்கு சேனல்! சூப்பர் அப்டேட் கொடுத்த தந்தி குரூப்!
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Embed widget