மேலும் அறிய

EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி. மதுரை, சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை மதுரை வந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு:

அவர் விமானத்தில் இருந்து விமான நிலையம் வரை டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமான பயணிகள் செல்லும் பேருந்தில் வந்தபோது ராஜேஸ்வரன் என்ற பயணி எடப்பாடி பழனிசாமி மீது அவதூறாக பேசி வீடிேயோ பதிவிட்டார். இதையடுத்து, விமான நிலையத்தின் வெளியில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ராஜேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தினர். 

இந்த நிலையில், தன்னை தாக்கியதாக ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த பயணி:

எடப்பாடி பழனிசாமி வந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் அவருடன் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.


EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

துரோகத்தின் அடையாளம்:

அப்போது, அவருடன் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலமாக ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார். அப்போது, அவர் தன்னுடைய லைவ்-வில் பேசியதாவது,” இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர்” என்று பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் அந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்தார். இதனால், அந்த பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட  விசாரனையில் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை விமான நிலையத்திற்கு வந்தவர் என்றும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் என்பதும் தெரியவந்தது. பின்னர், ராஜேஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

எடப்பாடி பழனிசாமி வந்த பேருந்திலே அவருக்கு எதிராக சசிகலா ஆதரவாளர் ஒருவர் ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகிய மூன்று  தரப்பு நெருக்கடிகளையும், தேர்தல் தோல்வி எதிரொலிகளையும் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த சூழலில், மதுரை சென்ற அவருக்கு விமான நிலைய பேருந்திலே எதிர்ப்புக் குரல் எழும்பியது குறிப்பிடத்தக்கது.



EPS: அ.ம.மு.க. நிர்வாகி மீதான தாக்குதல்; அவனியாபுரம் காவல்நிலையத்தில் இ.பி.எஸ். மீது வழக்குப்பதிவு

 

 இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS: பேருந்தில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி.. துரோகத்தின் அடையாளம் என கூச்சலிட்ட சக பயணி...! நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget