மேலும் அறிய

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!

கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
 

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்  போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும்.  இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக இந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.  சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, தொடர்ந்து நிறைவு பெற்றுவருகிறது. தற்போது கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளரை, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, ப்புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சமயத்தை தவிர மற்ற சமயங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக 22 கோடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டர் புதிய தார்சாலையும் அமைக்க நெடுச்சாலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த சாலை பணியானதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிந்து ஜனவரி முதல்வாரத்தில் திறக்கப்படும் எனவும் பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இது குறித்து கீழக்கரை பகுதி மக்கள் கூறுகையில்..,” அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி எங்கள் கிராமத்தில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான ஒன்று. தற்போது கட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல பிரமாண்டமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி வளர்ச்சியடையும். இந்த மைதானத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் ஜல்லிக்கட்டை காண முடியும்” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 
 

தலைப்பு செய்திகள்

வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை காந்தி அருங்காட்சியகம்: விரைவில் திறக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Embed widget