மேலும் அறிய

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!

கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
 

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்  போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும்.  இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக இந்த பணிகள் நிறைவடைந்துள்ளது.  சுமார் 14 ஏக்கரில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி, தொடர்ந்து நிறைவு பெற்றுவருகிறது. தற்போது கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் 3,700 நபர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் மூன்று அடுக்கு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளரை, மாடுபிடி வீரர்கள் உடை மற்றும் உணவு வழங்கப்படும் அறை, மாடுகளுக்கான கொட்டகை, மழை நீர் வடிகால், செயற்கை நீரூற்று, ப்புல் தரைகள், அலங்கார செடிகள் என பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சமயத்தை தவிர மற்ற சமயங்களில் வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மைதானத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு வசதியாக 22 கோடியில் சுமார் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டர் புதிய தார்சாலையும் அமைக்க நெடுச்சாலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அந்த சாலை பணியானதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த மாதம் டிசம்பர் இறுதிக்குள் பணிகள் முடிந்து ஜனவரி முதல்வாரத்தில் திறக்கப்படும் எனவும் பொங்கல் விழாவிற்கு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Madurai: பொங்கலுக்கு தயாராகும் உலகத் தரத்தில் கட்டப்படும் மதுரை ஜல்லிக்கட்டு மைதானம்!
 
இது குறித்து கீழக்கரை பகுதி மக்கள் கூறுகையில்..,” அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி எங்கள் கிராமத்தில் நடைபெறுவது எங்களுக்கு பெருமையான ஒன்று. தற்போது கட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் போல பிரமாண்டமாக உள்ளது. இதனால் எங்கள் பகுதி வளர்ச்சியடையும். இந்த மைதானத்தில் ஏகப்பட்ட பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் ஜல்லிக்கட்டை காண முடியும்” என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்! முதல் நாளே அதிரடி உத்தரவு! ஷாக்கில் இந்தியாRK Nagar Police Station Arson  அலட்சியம் செய்த போலீஸ்? இளைஞர் தீக்குளிப்பு காவல் நிலைய முன் பயங்கரம்Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump; WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
WHO-க்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; அமெரிக்கா விலகுவதால் பெரும் இழப்பு...
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Annamalai: கரெக்டா சொன்ன விஜய்..! திமுக உடன் கூட்டு சேர்ந்த பாஜக அண்ணாமலை? ”அப்ப அரசு என்ன தான் செய்யுமாம்?”
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Tirupati Annaprasadam: பக்தர்கள் குஷி..! திருப்பதி அன்னதானத்தில் இனி மசால் வடையும் உண்டு, ஆனா ஒரு ட்விஸ்டு..!
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
Erode East Bypoll: சித்தப்பா கட்சியினரின் பயங்கர திட்டம்..! கலக்கத்தில் சீமான், ஈரோடு கிழக்கு கனவும் போச்சா?
CV Shanmugam: பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி...  ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
பிரச்னையை திசைதிருப்புவதில் திமுக கில்லாடி... ரவுண்டு கட்டிய சி.வி.சண்முகம்
Peculiar Case on Rahul; ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
ஏங்க.. இப்படி எல்லாமா கேஸ் போடுறது.? ராகுல் காந்தி மீது வினோதமான வழக்கு...
Minister Ma. Subramanian: தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் 2,553 புதிய மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Schools Leave: எதிர்பார்க்கலைல்ல?  பிப்ரவரியிலும் தொடர் விடுமுறை; மகிழ்ச்சியில் மாணவர்கள்!- எப்படி?
Embed widget