மேலும் அறிய

World Asthma Day: உலக ஆஸ்துமா தினம்.. குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் ஆஸ்துமா நோய்.. காரணிகள் என்ன? முழு விவரம்..

உலக ஆஸ்துமா தினம் ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இந்த நோய் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாள்பட்ட நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகம் முழுவதும் இந்த நோய் குறித்து கூடுதல் கவனம் செலுத்தவும் உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, மே 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆஸ்துமா உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, இவர்களில் 38 மில்லியன் பேர் இந்தியர்கள் என கூறுகின்றனர்.

பல ஆண்டுகளாக, காற்று மாசு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆஸ்துமாவால் ஏற்படும் இறப்பு மற்றும் நோயின் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. டாக்டர் ரவி சேகர் ஜா, தனியார் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் யூனிட் ஹெட் ஆஸ்துமா நோய் பற்றி கூறுகையில் "இளம் வயதினர் premature death காரணமாக உயிரிழக்கின்றனர். பல குழந்தைகள் ஆஸ்துமா நோயால் பள்ளிப்படிப்பை முழுமையாக படிக்க முடியாமல் பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.  மேலும் சிலர் இந்த நோய் காரணமாக வேலை வாய்ப்பை கூட இழக்கின்றனர்" என குறிப்பிட்டுள்ளார்.  

ஆஸ்துமா என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கும் தொற்றா நோயாகும். இது குழந்தைகளிடையே மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளில் இருக்கும் மாறுபாட்டால் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம் மற்றும் இருமலுடன் கூடிய மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுகிறது. இவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆஸ்துமா நோய் நகரவாசிகள் மத்தியில் அதிகமாக உள்ளது. நகரத்தில் இருக்கும் மாசு காரணமாக குறிப்பாக குழந்தைகள் மத்தியில் அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது.

புகைபிடித்தல் ஆஸ்துமா நோய்க்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காற்று மாசுபாடு, வைரஸ் தொற்று, வானிலை மாற்றங்கள் ஆகியவை ஆஸ்துமா ஏற்படுத்தும் பிற பொதுவான காரணங்களாக கருதப்படுகிறது. குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் போது சில குழந்தைகள் இன்ஹேலரை பயன்படுத்த மறுப்பதால் இந்த நோய் தீவிரமடைகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா நோய்த்தொற்று தொடங்கியதில் இருந்து தடுப்பூசிக்கான விழிப்புணர்வு மக்களிடையே அதிகம் இருப்பதாகவும், இதனால் அனைவரும் தடுப்பூசிகள் முறையாக செலுத்திக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். தடுப்பூசி காரணமாக நோயின் தீவிரம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்ட் கிளினிக்கல் இம்யூனாலஜியில் வெளியிடப்பட்ட 2015 ஆய்வின்படி, ஆஸ்துமா நோயின் முக்கிய காரணமாக மாசு உள்ளது என்றும் வெளியில் இருக்கும் மாசை விட உட்புறத்தில் இருக்கும் மாசு (indoor pollution) அதிக பாதிப்பு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய வீட்டுப் பொருட்கள், கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள், அச்சு மாசுபாடு, துப்புரவுப் பொருட்கள் மற்றும் புகையிலை புகை ஆகியவை ஆஸ்துமா ஏற்படுத்தும் முக்கிய பாதிப்புகள் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

பெரும்பாலான ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமை இருப்பதால், மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், மூச்சுத்திணறல் உடன் இருமல் போன்றவை முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. இவை இரவில் அல்லது அதிகாலை நேரங்களில் தீவிரமாக இருக்கும்.  அதுமட்டுமல்லாமல் சளி, தும்மல் மற்றும் தோல் ஒவ்வாமை போன்ற பிற ஒவ்வாமையும் இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆஸ்துமா நோயை, சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால், எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.     

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget