மேலும் அறிய

Vismaya case: கேரளாவை அதிர வைத்த விஸ்மயா தற்கொலை வழக்கு! கணவர் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு!!

விஸ்மயா வரதட்சணை கொடுமை வழக்கில் அவரது கணவர் கிரண்குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வரதட்சணை கொடுமையை சந்தித்து வந்த இளம்பெண் விஸ்மயா தற்கொலை வழக்கில், அவருடைய கணவர் குற்றவாளி என்று கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு, விஸ்மயா (Vismaya) கிரண் குமார் வீட்டில் இறந்து கிடந்தார். இவரை கணவர் கிரண்குமார் தொடர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இந்த வழக்கில், கிரண் குமார் மொபைலில் இருந்து 5 லட்சம் மெசேஜ்கள், விஸ்மயாவின் ஆடியோ மெசேஜ்கள் மற்றும் விஸ்மயாவின் உடற்கூராய்வில் அவர் உடலில் இருந்த காயங்கள் உள்ளிட்ட பல  டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் காரணம் என்று கூறி அவரை குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.

வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டிய ஆகியவற்றின் கீழ் கிரண் குமாருக்கு தண்டை குறித்து நாளை அறிவிக்க இருக்கிறது கேரள நீதிமன்றம். 

 தனது கணவர் தன்னைக் கொடுமை செய்வதாக விஸ்மயா தனது தந்தையிடம் அழுது கதறும் ஆடியோ நேற்று வெளியாகியிருந்தது. இன்று கிரண்குமாரை குற்றவாளி என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு பின்னணி:

 ஆயுர்வேத மருத்துவத்துக்குப் படித்து வந்த 22 வயது விஸ்மயாவை அவரது குடும்பம் இரண்டு வருடத்துக்கு முன்பு கோட்டயத்தைச் சேர்ந்த கிரண் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தது. தனது பெண் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக நூறு சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 9 லட்சத்துக்குக் கார் என வரதட்சணையை வாரி இறைத்திருக்கிறது குடும்பம். இத்தனைக் கொடுத்தும் விஸ்மயா அந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. கிரண் விஸ்மயாவை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.  திருமணமான ஆறு மாதத்திலேயே தன் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் விஸ்மயா. ஆனால் எப்படியோ சமாதானம் செய்து அவரைத் தன் வீட்டுக்கு மீண்டும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிரண். கிரண் அழைத்துச் சென்ற பிறகு தன் பெற்றோரிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்த்திருக்கிறார் விஸ்மயா. அதிகபட்சமாகத் தனது அம்மாவுடன் மட்டுமே அவரது உரையாடல் இருந்திருக்கிறது.

இதற்கிடையேதான் கிரண் தன்னை அடித்துத் துன்புறுத்திய புகைப்படங்களை தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கிறார் விஸ்மயா. வரதட்சணையாக அளித்த கார் வேண்டாம் அதற்கு பதிலாகப் பெற்றோரிடம் பணமாக வாங்கிவரும்படி விஸ்மயாவை வற்புறுத்தியிருக்கிறார் கிரண். முடியாது எனச் சொல்லவும் அடித்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறார். காரில் இந்தச் சண்டை நிகழ்ந்திருக்கிறது. விஸ்மயா காரை விட்டு வெளியேற முயற்சிசெய்ய அவரை முடியை பிடித்து இழுத்துக் கொடுமை செய்ததாகத் தனது சகோதரருக்கு அனுப்பியிருக்கும் வாட்சப் சாட்டில் சொல்லியிருக்கிறார்.

இந்தச் சம்பவம் நடந்த இரண்டு நாட்களில்தான்  தனது கணவர் வீட்டில் பிணமாகக் கிடந்திருக்கிறார் விஸ்மயா. கொலையா தற்கொலையா என்கிற காரணம் தெரியவில்லை என்றாலும் இது வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணம். கேரள மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்றம் கிரண் குமார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Delhi Patna Bullet Train Project: 1,170 கி.மீ தூரம் வெறும் 4.5 மணி நேரம் தான்! ரயில்வேயின் மெகா பிளான்! மாறிப்போகும் இந்திய ரயில்வே!
Delhi Patna Bullet Train Project: 1,170 கி.மீ தூரம் வெறும் 4.5 மணி நேரம் தான்! ரயில்வேயின் மெகா பிளான்! மாறிப்போகும் இந்திய ரயில்வே!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
உயிர்பெற்ற ஆறு; சொந்த செலவில், தனி ஆளாய் குப்பை கால்வாயை நீர்நிலையாக மாற்றிய மாணவன்!
உயிர்பெற்ற ஆறு; சொந்த செலவில், தனி ஆளாய் குப்பை கால்வாயை நீர்நிலையாக மாற்றிய மாணவன்!
புது டைம் டேபிள்! திருச்சி, சபரி எக்ஸ்பிரஸ் உட்பட 8 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ!
புது டைம் டேபிள்! திருச்சி, சபரி எக்ஸ்பிரஸ் உட்பட 8 முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
EV Scooter Sales August: சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
சாதித்த டிவிஎஸ், சறுக்கிய ஓலா.! ஆகஸ்ட் மாசம் அடிச்சுத் தூக்கிய மின்சார ஸ்கூட்டர் பிராண்ட் எது.?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
Embed widget