மேலும் அறிய

விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்த மத்திய அரசு... நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல்..!

கோடையில் விளையும் பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் பயிர்களை பல்வகைப்படுத்த ஊக்குவிக்கும் நோக்கிலும் கோடையில் விளையும் பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நெல் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான கட்டாய காரீஃப் (நெல்) பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

சந்தை விலையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகளிடமிருந்து பயிர்களை அரசாங்கம் குறிப்பிட்ட விலையில் வாங்கும். இதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை என சொல்லப்படுகிறது. இது விவசாயிகளுக்கு உத்திரவாதமாகவும், அதிக உணவுப் பயிரிடுவதற்கான ஊக்கமாகவும் செயல்படுகிறது.

நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, குவிண்டாலுக்கு (100 கிலோ) ₹ 143 உயர்த்தப்பட்டுள்ளது. பொது ரகத்துக்கு ₹ 2,183 ஆகவும், கிரேடு A ரகத்துக்கு ₹ 2,203 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவைவிட அதிக லாபத்தை தரும்:

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் தினை போன்ற பிற பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, 4% முதல் 12% வரை பல்வேறு அளவுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 சதவீத லாப வரம்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு விவசாயிகள் தங்கள் பயிர் முறைகளை பல்வகைப்படுத்தவும், அதிக மகசூல் தரும் தொழில்நுட்பங்களை பின்பற்றவும் ஊக்குவிக்கும். விவசாயிகளுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, அகில இந்திய எடையுள்ள சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது பஜ்ரா (82%), அதைத் தொடர்ந்து துர் (58%), சோயாபீன் (52%) மற்றும் உளுந்து (51%) ஆகியவற்றில் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திச் செலவை விட அதிக லாபத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், ஊட்டச்சத்து தானியங்கள்/ஸ்ரீ அன்னா போன்ற தானியங்கள் அல்லாத பயிர்களை பயிரிடுவதை இந்திய அரசாங்கம் ஊக்குவித்து வருகிறது. ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (NFSM) போன்ற பல்வேறு திட்டங்களால், இந்த முயற்சிகளுக்கு வலு சேர்க்கப்படுகிறது. 

75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் மோடி, கடந்த 2016ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget