மேலும் அறிய

எல்லையில் கண்டறியப்பட்ட ட்ரோன்கள் .. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்?

இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் ஊடுருவல் அடையாளங்கள் அல்லது ஏதேனும் பொருட்கள் விட்டுச் செல்லப்பட்டதா என்பது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன்களை அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவலையடுத்து எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமையான ஜனவரி 11ம் தேதி மாலை ஜம்மு காஷ்மீரின் சம்பா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதி இடங்களில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன் நடமாட்டத்தை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ட்ரோன்கள் பாகிஸ்தான் பக்கத்திலிருந்து நுழைந்து, இந்திய எல்லையில் சிறிது நேரம் வட்டமிட்டு, பின்னர் எல்லையைத் தாண்டித் திரும்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் உஷார் படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் ஊடுருவல் அடையாளங்கள் அல்லது ஏதேனும் பொருட்கள் விட்டுச் செல்லப்பட்டதா என்பது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய அதிகாரிகள், “மாலை 6:35 மணியளவில் ரஜோரியின் நவ்ஷேரா செக்டாரில் உள்ள கானியா-கல்சியன் கிராமத்தின் மீது ஒரு சந்தேகத்திற்கிடமான ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது. எல்லைக்கோட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் இதனை உறுதி செய்த பின்னர் அதனை வீழ்த்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

அதேசமயம் ரஜௌரியின் தெரியாத்தில் உள்ள கப்பர் கிராமத்தில் மற்றொரு ட்ரோன் காணப்பட்டது. ஒளிரும் விளக்குடன் கூடிய அந்த ட்ரோன் கலகோட்டில் உள்ள தர்மசல் கிராமத்தின் திசையிலிருந்து வந்து பராக் நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா மாவட்டத்தில், ராம்கர் செக்டாரில் உள்ள சக் பாப்ரால் கிராமத்தின் மீது இரவு 7:15 மணியளவில் ஒளிரும் ஒளியுடன் கூடிய ட்ரோன் போன்ற ஒரு பொருள் வட்டமிட்டதும் தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் மாலை 6:25 மணியளவில் எல்லைக்கோடு வழியாக மான்கோட் செக்டாரில் உள்ள டெய்ன் திசையிலிருந்து டோபா நோக்கி மற்றொரு சந்தேகத்திற்குரிய ட்ரோன் நகர்ந்ததும் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து தான் இந்திய பாதுகாப்பு படையினர்தரைவழி தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ட்ரோன்கள் பெரும்பாலும் எல்லை பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவோ அல்லது இந்திய எல்லைக்குள் கடத்தல் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை அனுப்பவோ பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. 

ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் துகாப்புப் படையினர் ஆயுதக் குவியலை மீட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ட்ரோன் சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி இரவு பாகிஸ்தானின் ட்ரோன் மூலம் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பையில் இரண்டு கைத்துப்பாக்கிகள், மூன்று பத்திரிகைகள், 16 தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டுகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத இடங்கள் தகர்க்கப்பட்டது. பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் ட்ரோன் நடமாட்டம் குறைந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 5 ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
நிச்சயம் செய்து விட்டு திருமணத்துக்கு மறுத்த பெண்.. எய்ட்ஸ் நோயை பரப்பி விட்ட நபர்!
நிச்சயம் செய்து விட்டு திருமணத்துக்கு மறுத்த பெண்.. எய்ட்ஸ் நோயை பரப்பி விட்ட நபர்!
Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
Top 10 News Headlines: LPG சிலிண்டர் தட்டுப்பாடு முதல் தேர்தல் தேதி தாமதம் வரை.. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?பரபரப்பான செய்திகள்!
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
SC on Menstrual Leave: ”இப்படிலாம் பண்ண பொண்ணுங்கள யாரும் வேலைக்கு எடுக்கமாட்டாங்க” - உச்சநீதிமன்றம் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
TVK Vijay: சரக்கு பாட்டிலால் விஜய் புறப்பட தாமதமா? உண்மையை உடைத்த சிடிஆர் நிர்மல்குமார்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
Kamal Haasan - Chinmayi: வைரமுத்துவை வாழ்த்திய கமல்.. கழுவி ஊற்றிய சின்மயி.. கடும் மோதல்!
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
DMK Congress: அப்செட்டில் மக்கள்! காங்கிரசுக்கு இந்த 7 தொகுதிகள் மட்டும் கிடையாது..! எந்தெந்த தொகுதிகள்?
Electric Stove Subsidy : மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை... மின்சார அடுப்பு வாங்க 25% மானியம் - தமிழக அரசு அதிரடி
DMK alliance seat allocation : காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
காங்., தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதி கொடுப்பீங்க.. எங்களுக்கு கம்மியா.!! முரண்டு பிடிக்கும் சிபிஎம்- அடுத்தது என்ன.?
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
TVS Orbiter V1 vs V2 Comparison: டிவிஎஸ் Orbiter V1, Orbiter V2 இ ஸ்கூட்டருக்கும் என்ன வித்தியாசம்? இதோ முழு ஒப்பீடு!
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள்  - ராஜ்சத்யன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு !
" Whats App பயனர்களுக்கு அதிர்ச்சி " சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
Embed widget