மேலும் அறிய

மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மலையாளமும் இந்திய மொழிகளுள் ஒன்றுதான்; மொழிபேதத்தை நிறுத்துங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக்காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் செவிலியர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், மலையாளத்தில் பேசினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

நர்ஸிங் சூப்பிரன்டன்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜிப்மரில் மலையாள மொழி பயன்பாடு தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளது. பணியிடத்தில் சில செவிலியர் மலையாள மொழியிலேயே பேசிக் கொள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளும், பணியாளர்களும் மலையாள மொழி அறியாதவர்கள். இதனால், அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனை ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். மீறினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

இதுதொடர்பாக ஊடகங்கள் பலவும் கேள்வி எழுப்பியும் டெல்லி அரசாங்கமோ அல்லது ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அர்ச்சனா தாகூரும் எவ்வித விளக்கமும் கூறவில்லை. ஆனால் இது தொடர்பாக ஜிப்மரில் பணியாற்றிவரும் கேரள நர்ஸ் ஒருவர் கூறும்போது, யாரோ ஒரு நோயாளி நர்ஸ்கள் தங்களுக்குள் மலையாள மொழியில் பேசிக் கொள்வது புரியவில்லை எனக் கூறியதால், தலைமைச் செயலகத்திலிருந்து இந்த சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறபப்டுகிறது. இது மிகவும் தவறு. இங்குள்ள 60% நர்ஸிங் ஊழியர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்களே. நாங்கள் யாரும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதில்லை. இங்கு மணிப்பூரி, பஞ்சாபி நர்ஸ்களும் உள்ளனர். அவரவர் அவரவர் மாநிலத்தவர்களுடன் பேசும்போது சொந்த மொழியைப் பேசுவது இயல்பே. இது பிரச்சினையே இல்லை எனக் கூறினார். இந்நிலையில், டெல்லி ஜிப்மரின் உத்தரவுக்கு டெல்லி எய்ம்ஸ், எல்என்ஜிபி, ஜிடிபி மருத்துவமனைகளின் மலையாள நர்ஸ் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதேபோல், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், "சுதந்திர நாட்டில் அரசு இயந்திரங்கள் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஊழியர்கள் அவர்களுக்குள் பேசும்போது சொந்த மொழியில் பேசுவதில் என்ன தவறு. இது ஏற்புடையது அல்ல. மிகவும் கொடூரமானது. மற்றவர்களை புண்படுத்துவதும் கூட. மனித உரிமைகளுக்கும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் எதிரானது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்மலையாள மொழிக்கு எதிரான டெல்லி ஜிப்மரின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Embed widget