மேலும் அறிய

25 நாள்களில் 7 பேரை கொன்ற புலி... சுட்டு பிடிக்க உத்தரவிட்ட வனவிலங்கு காப்பாளர்

துப்பாக்கிச் சுடு வீரர், கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில கால்நடை நிபுணர்கள் அடங்கிய வன அலுவலர்கள் குழு, கடந்த ஆறு நாட்களாக புலியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது.

பீகாரில் கடந்த 25 நாட்களில் சிவ்தஹான் மற்றும் கோவர்தன் வனப்பகுதிக்கு அருகே 12 வயது சிறுமி உள்பட 7 பேரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் புலியை சுட்டு பிடிக்க நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடு வீரர், கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில கால்நடை நிபுணர்கள் அடங்கிய வன அலுவலர்கள் குழு, கடந்த ஆறு நாட்களாக புலியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. இருப்பினும், அந்த பகுதியில் புலி தொடர்ந்து, மனிதர்களை கொன்று வந்துள்ளது.

 

இதுகுறித்து வால்மீகி புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நேசமணி கூறுகையில், "புலியை சுட பீகார் தலைமை வனவிலங்கு காப்பாளர் பி.கே. குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். புலியைக் கண்டுபிடிக்க சுமார் 500 வனத்துறை அலுவலர்கள் அடங்கிய குழு தும்ரி கிராமத்திற்கு அருகே சென்றுள்ளது. விலங்குகளை கண்காணிக்க ஆளில்லா விமானமும் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

புலியை சுட்டு பிடிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர் இதுகுறித்து பேசுகையில், "அந்த புலிக்கு 3.5 வயது இருக்கும். செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அப்பகுதியில் மக்களைக் கொன்று வருகிறது. புலியை கண்டால் சுட்டுக் கொல்ல பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இது உள்ளூர் மக்களுக்கு ஆபத்தானது" என்றார்.

நேற்று ராம் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட டாம்ரோ கோவதன் கிராமத்தில், சஞ்சய் மஹ்தோ என்ற கிராமவாசி காலை கடனை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த நபரை அடர்ந்த கரும்பு வயலுக்கு உள்ளே அந்த புலி இழுத்துச் சென்றது. அந்த நபரின் கழுத்தில் கடித்த தடயங்கள் காணப்பட்டதாகவும், கழுத்து எலும்பு முறிந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிராம மக்கள் வனத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரேஞ்ச் அதிகாரி சுஜீத் குமார் உள்பட சில அலுவலர்களை தாக்கி, சொந்தமான வாகனத்தை சேதப்படுத்தினர்.

வியாழன் இரவு பாகி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்ஹி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அச்சிறுமியை ​​புலி கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வன அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த 20 நாட்களில் இரண்டு முறை புலியை பிடிக்க நாங்கள் நெருங்கிவிட்டோம். ஆனால் தோல்வியடைந்தோம்" என்றார்.

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகி தேசிய பூங்கா மாநிலத்தின் ஒரே தேசிய பூங்கா ஆகும். இது மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பில் 17.4% (898.45 கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி, 40 புலிகள் காப்பகத்தில் இருக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget