மேலும் அறிய

25 நாள்களில் 7 பேரை கொன்ற புலி... சுட்டு பிடிக்க உத்தரவிட்ட வனவிலங்கு காப்பாளர்

துப்பாக்கிச் சுடு வீரர், கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில கால்நடை நிபுணர்கள் அடங்கிய வன அலுவலர்கள் குழு, கடந்த ஆறு நாட்களாக புலியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது.

பீகாரில் கடந்த 25 நாட்களில் சிவ்தஹான் மற்றும் கோவர்தன் வனப்பகுதிக்கு அருகே 12 வயது சிறுமி உள்பட 7 பேரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் புலியை சுட்டு பிடிக்க நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சுடு வீரர், கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில கால்நடை நிபுணர்கள் அடங்கிய வன அலுவலர்கள் குழு, கடந்த ஆறு நாட்களாக புலியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. இருப்பினும், அந்த பகுதியில் புலி தொடர்ந்து, மனிதர்களை கொன்று வந்துள்ளது.

 

இதுகுறித்து வால்மீகி புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நேசமணி கூறுகையில், "புலியை சுட பீகார் தலைமை வனவிலங்கு காப்பாளர் பி.கே. குப்தா உத்தரவு பிறப்பித்துள்ளார். புலியைக் கண்டுபிடிக்க சுமார் 500 வனத்துறை அலுவலர்கள் அடங்கிய குழு தும்ரி கிராமத்திற்கு அருகே சென்றுள்ளது. விலங்குகளை கண்காணிக்க ஆளில்லா விமானமும் அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

புலியை சுட்டு பிடிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள வீரர் இதுகுறித்து பேசுகையில், "அந்த புலிக்கு 3.5 வயது இருக்கும். செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அப்பகுதியில் மக்களைக் கொன்று வருகிறது. புலியை கண்டால் சுட்டுக் கொல்ல பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, இது உள்ளூர் மக்களுக்கு ஆபத்தானது" என்றார்.

நேற்று ராம் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட டாம்ரோ கோவதன் கிராமத்தில், சஞ்சய் மஹ்தோ என்ற கிராமவாசி காலை கடனை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அந்த நபரை அடர்ந்த கரும்பு வயலுக்கு உள்ளே அந்த புலி இழுத்துச் சென்றது. அந்த நபரின் கழுத்தில் கடித்த தடயங்கள் காணப்பட்டதாகவும், கழுத்து எலும்பு முறிந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிராம மக்கள் வனத்துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரேஞ்ச் அதிகாரி சுஜீத் குமார் உள்பட சில அலுவலர்களை தாக்கி, சொந்தமான வாகனத்தை சேதப்படுத்தினர்.

வியாழன் இரவு பாகி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்ஹி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 12 வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தபோது, அச்சிறுமியை ​​புலி கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக வன அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த 20 நாட்களில் இரண்டு முறை புலியை பிடிக்க நாங்கள் நெருங்கிவிட்டோம். ஆனால் தோல்வியடைந்தோம்" என்றார்.

பீகார் மாநிலத்தின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள வால்மீகி தேசிய பூங்கா மாநிலத்தின் ஒரே தேசிய பூங்கா ஆகும். இது மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பில் 17.4% (898.45 கிமீ) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2018 புலிகள் கணக்கெடுப்பின்படி, 40 புலிகள் காப்பகத்தில் இருக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Embed widget