மேலும் அறிய

IEW 2023: இந்திய எரிசக்தி வாரத்தை நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி! நோக்கம் என்ன?

சோலார் மற்றும் துணை எரிசக்தி மூலங்களில் ஒரே நேரத்தில் செயல்படும் ஒரு புரட்சிகரமான சூரிய சமையல் அடுப்பு மாதிரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளை இந்திய எரிசக்தி வாரத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.  பிப்ரவரி 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சி,  இந்தியாவின் வளர்ந்துவரும் ஆற்றலை மாற்று சக்தியாக வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டவர் பலர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியானது,  மரபு மற்றும் மரபுசாரா எரிசக்தித் துறை, அரசு மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றிணைத்து, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கும். இதில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். 30,000 பிரதிநிதிகள், 1,000  கண்காட்சியாளர்கள் மற்றும் 500 பேச்சாளர்கள் இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசை உரையாடலில் பிரதமர் பங்கேற்பார். பசுமை ஆற்றல் துறையில் பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

E20 எரிவாயு:

எரிசக்தித் துறையில், தற்சார்பு தன்மையை அடைய எத்தனால் கலப்புத் திட்டம் மீதான அரசின் கவனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொடர் முயற்சியால், 2013-14-ல் இருந்து எத்தனால் உற்பத்தி திறன் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

எத்தனால் கலப்புத் திட்டம் மற்றும் உயிரி எரிபொருள் திட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், 318 லட்சம் மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ரூ.54,000 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணி சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக,  2014 முதல்  2022 வரை எத்தனால் விநியோகத்திற்காக சுமார் ரூ 81,800 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இயக்கப் பேரணி

பசுமை எரிபொருட்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பசுமை இயக்க பேரணியை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பாட்டிலற்ற’ முன்முயற்சி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  ‘பாட்டிலற்ற’ முன்முயற்சியின் கீழ், சீருடைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு சீருடையும் சுமார் 28 பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து அதன் மூலம் செய்யப்பட்டது ஆகும்.

இரட்டை அடுப்பு மாதிரி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின்  வீட்டுப் பயன்பாட்டிற்கான  சோலார் சமையல் இரட்டை-அடுப்பு மாதிரியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இது ஒரு புரட்சிகர உட்புற சோலார் சமையல் தீர்வாகும். இது சூரிய மற்றும் துணை ஆற்றல் ஆதாரங்கள் மூலம் ஒரே நேரத்தில் வேலை செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட் திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட் திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட் திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட் திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
Embed widget