மேலும் அறிய

Pakistan Drones : பரபர பதற்றம்.. எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் ட்ரோன்கள்...பதிலடி கொடுத்த விரட்டிய இந்திய ராணுவம்..

இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து 191 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கசோவால் பகுதியில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு, இந்திய எல்லை பகுதிக்குள் வந்த ஆளில்லா விமானம் மீது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, அது பாகிஸ்தானுக்குத் திரும்பி சென்றது. பாதுகாப்பு படை வீரர்கள், ட்ரோனை நோக்கி குறைந்தது 96 முறை சுட்டனர்.

அதன் மீது ஐந்து குண்டுகளை வீசினர். அந்த ஆளில்லா விமானம் எங்கே சென்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபடுவது மட்டும் இன்றி ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அதை சுட்டு வீழ்த்த இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ட்ரோன்களின் வருகையை முன்கூட்டியே கண்டறிந்து செயலிழக்க செய்யும், ஜாமர் கருவி மற்றும் அதை சுட்டு வீழ்த்த துப்பாக்கிகளுடன் அடங்கிய நவீன கருவிகளை எல்லையில் நிறுவி உள்ளது.

 

இங்கு, வீரர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பாகிஸ்தானில் இருந்து 191 ட்ரோன்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.

இதில், 171 ட்ரோன்கள் பஞ்சாப் பகுதிக்குள்ளும், 20 ட்ரோன்கள் ஜம்மு பகுதியிலும் நுழைந்திருக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள் உள்ளிட்டவை இந்த ட்ரோன்கள் மூலமாகதான் கடத்தப்படுகின்றன.

இந்த கடத்தலின் மூலம் வரும் பணம், பயங்கரவாத நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அத்துமீறல்களை தடுக்க, இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 'குவாட்காப்டர் ஜாமர்' எனப்படும் ட்ரோன்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவியை ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தி உள்ளது. 

சமீப காலமாகவே, ட்ரோன் வாயிலாக நடத்தப்படும் பயங்கரவாதி செயல்கள் அதிகரித்து வந்துள்ளன. இந்தியாவில் மட்டும் இன்றி, உலகம் முழுவதும் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளது.

சமீபத்தில், கிழக்கு சிரியாவில் அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அமெரிக்க ஆதரவு சிரிய எதிர்ப்பு போராளிகளால் நடத்தப்படும் ராணுவ தளத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், எந்த வித உயிர்சேதமும் நிகழவில்லை என்றும் பொருள்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget