மேலும் அறிய

இந்திய வரலாற்றை மாற்றி எழுதிய ஆகஸ்ட் 15.. இந்த நாடுகளுக்கும் அன்றுதான் சுதந்திர தினமாம்!

இந்திய வரலாற்றை மாற்றிய எழுதிய ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று வேறு எந்த நாடுகளுக்கு எல்லாம் சுதந்திரம் கிடைத்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு, இந்தியாவுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு பெரும் போராட்டத்திற்கு பிறகே சுதந்திரம் கிடைத்தது.

அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திரம் தினம் கொண்டாடப்படுகிறது. எண்ணற்ற இந்தியர்களின் தன்னலமற்ற தியாகங்களும், அவர்கள் வழிநடத்திய சுதந்திரப் போராட்டமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

காலனியாதிக்கத்தால் இந்தியா மட்டும் பாதிக்கப்படவில்லை. உலகில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து ஆட்சி புரிந்து வந்தன.

இரண்டாம் உலகப்போரின் முடிவால் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவீனம் அடைந்தது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரம் கிடைத்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 15ஆம் தேதி இன்று இந்தியா மட்டும் இன்றி பிற நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. இந்திய வரலாற்றை மாற்றிய எழுதிய ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று வேறு எந்த நாடுகளுக்கு எல்லாம் சுதந்திரம் கிடைத்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

வடகொரியா:

வட கொரியா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று தேசிய விடுதலை தினத்தை கொண்டாடுகிறது. 35 ஆண்டுகால ஜப்பானிய ஆக்கிரமிப்பும் கொரியா மீதான காலனித்துவ ஆட்சியும் அன்றுதான் முடிவுக்கு வந்தது. உலகப்போரில் நேச நாட்டுப் படைகளின் உதவியுடன் சுதந்திரத்தை அடைந்தது.

கடந்த 1945ஆம் ஆண்டு, கொரிய தீபகற்பம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டு, வடகொரியா, தென்கொரியா என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டன. சுதந்திர கொரிய அரசாங்கங்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1948ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி அமைந்தன.

தென்கொரியா:

வடகொரியாவை போன்றே தென்கொரியாவும் ஆகஸ்ட் 15ஆம் தேதியைதான், சுதந்திரமாக தினமாக கொண்டாடுகிறது. குவாங்போக்ஜியோல் என்று இந்த நாளை தென் கொரியர்கள் அழைக்கிறார்கள். அதாவது ஒளி திரும்பிய நாள் என கூறுகிறார்கள். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததைக் கொண்டாடும் வகையில், பல நாடுகள் இந்தத் தேதியை 'ஜப்பான் தினத்தின் மீதான வெற்றி' என்றும் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது.

பஹ்ரைன்:

இந்தியாவை போன்று பஹ்ரைனும் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1971ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதிதான், சுதந்திரம் பெற்றது. இந்தியா தனது சொந்த சுதந்திரத்தை அடைந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகுதான், பஹ்ரைனுக்கு சுதந்திரம் கிடைத்தது. 

1960 களின் முற்பகுதியில் சூயஸின் கிழக்கிலிருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரிட்டிஷ் அறிவித்ததைத் தொடர்ந்து, பஹ்ரைனில் மக்கள்தொகை கணக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை எடுத்தது. அதன் பிறகே, பஹ்ரைனுக்கு சுதந்திரம் கிடைத்தது.

காங்கோ:

ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்த நாடு காங்கோ-பிராசாவில்லே என்றும் அழைக்கப்படுகிறது. இது முதலில் பிரெஞ்சு காலனியாக இருந்தது. ஆகஸ்ட் 15, 1960 இல் இந்த நாடு பிரான்சிடம் இருந்து முழு சுதந்திரம் பெற்றது. எனவே, ஆகஸ்ட் 15ஆம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது. இது, தேசிய தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget