மேலும் அறிய

Live-In Relationship Verdict | ’லிவிங் டுகெதர் உறவுமுறை தவறு!’ – பஞ்சாப் உயர்நீதிமன்றம்

அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அனில் ஷேத்ரபால், ‛இப்படியான திருமணம் செய்யாத உறவுமுறையை அங்கீகரித்தால் சமூகத்தின் கட்டமைப்பே நொறுங்கிவிடும்,’ எனச் சொல்லி வேறொரு மனுவை நிராகரித்தார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் சிங் இருவரும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். குல்சாவுக்கு வயது 19 மற்றும் குர்வீந்தருக்கு வயது 22. பெற்றோர் சாதி மறுப்புத்திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறிய இருவரும் அந்த மாநிலத்தின் தாம்தாரி மாவட்டத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே குல்சா குமாரியின் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து என்றும் அதனால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இணையர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலக் காவல்துறையை அணுகியுள்ளனர். எனினும் அவர்களது பெற்றொரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வந்த நிலையில் மாநில உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள்.

கடந்த 11 மே அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மதான் தலைமையிலான அமர்வு,’மனுதாரர்களான குல்சா குமாரி மற்றும் குர்வீந்தர் இருவரும் இந்த மனுவின் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்பதன் வழியாகத் தாங்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதை அங்கீகரிக்கச் சொல்லிக் கேட்கிறார்கள். ஆனால் அது சமூகத்துக்கும் ஒழுக்கத்துக்கும் புறம்பானது.அதனால் மனுவில் கோரப்படும் பாதுகாப்பை வழங்கமுடியாது’ எனத் தீர்ப்பளித்துள்ளார்.


Live-In Relationship Verdict | ’லிவிங் டுகெதர் உறவுமுறை தவறு!’ – பஞ்சாப் உயர்நீதிமன்றம்

’சாதியின் காரணமாக இணையர்கள் இருவரது காதல் உறவை குல்சாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வருகின்றனர். மேலும் குல்சாவின் பெற்றோரிடம் அவரது ஆவணங்கள் முழுவதும் இருப்பதால் இவர்களால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை’ என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள நீதிமன்ற அமர்வு, ‘திருமணம் செய்யவில்லை என்று சொல்வதே ஒழுக்கமற்றதுதான். ஒழுக்கமற்றது என்னும்போது அது சட்டத்துக்குப் புறம்பானதும் கூட’ என பதிலளித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வலுத்த விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது.

மேலும் ஆறு நாட்களுக்கு முன்னர்தான் அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அனில் ஷேத்ரபால்,’இப்படியான திருமணம் செய்யாத உறவுமுறையை அங்கீகரித்தால் சமூகத்தின் கட்டமைப்பே நொறுங்கிவிடும்’ எனச் சொல்லி வேறொரு மனுவை நிராகரித்திருந்தார்.

இதே பஞ்சாப் நீதிமன்றம்தான் ஒருவருடத்துக்கு முன்பு,’பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் தீர்மானிக்க முடியாது’ எனச் சொல்லி திருமணமற்ற உறவுமுறை ஒன்று தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

திருமணமற்ற உறவு முறை குறித்து ஏற்கனவே பல்வேற மாநில உயர்நீதிமன்றங்கள் வெவ்வேறு விதமான தீர்ப்புகளையும், கருத்துக்களையும் வழங்கியுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் கூட இது தொடர்பான வழக்குகள் சென்றள்ளது. ஆனாலும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட தீர்ப்புகளே வருகிறது. நிலையான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதால் தான் இந்த விவாரத்தில் ஒரு தீர்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பெற்றோரிடத்தில் உள்ளது. அதற்கு அரசு ஆவணம் செய்யலாம் என்றும் பலர் கோரிக்கை வைக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget