மேலும் அறிய

Watch Video: பதைபதைக்க வைத்த காட்சிகள்.. நீதிமன்றத்திற்குள் புகுந்த சிறுத்தை.. கம்பெடுத்து தாக்கிய வழக்கறிஞர்கள்..! அடுத்து நடந்தது என்ன?

காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது காசியாபாத் நகரம். இங்குள்ள கவிநகர் பகுதியில் காசியாபாத் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. காசியாபாத் நீதிமன்றம் எப்போதும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் இயங்கக்கூடிய நீதிமன்றம் ஆகும். தினந்தோறும் நூற்றுக்கணக்கான போலீசாரும், வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

நீதிமன்றத்தில் புகுந்த சிறுத்தை:

இந்த நிலையில், காசியாபாத் நீதிமன்றம் இன்றும் எப்போதும் போல பரபரப்பாக காணப்பட்ட நிலையில், இந்த நிலையில் வழக்கம்போல இன்றும் காசியாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகம் இயங்கியது. அப்போது, திடீரென எங்கிருந்தோ வந்த சிறுத்தை நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த சிலரை கடித்து குதறியது.

சிறுத்தையின் தாக்குதலுக்கு ஆளான சிலர் அலறியடித்து ரத்த வெள்ளத்தில் தப்பி ஓடினர். திடீரென நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து ரத்த வெள்ளத்துடன் சிலர் அலறியடித்து ஓடிவந்ததை கண்ட வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், காயம்பட்டவர்கள் தாங்கள் சிறுத்தையால் தாக்கப்பட்டதாக கூறியதையடுத்து, நீதிமன்ற வளாகத்திற்குள் சிறுத்தை புகுந்த தகவலறிந்த அனைவரும் பீதியில் உறைந்தனர்.

தாக்கிய வழக்கறிஞர்கள்:

மேலும், நீதிமன்றத்தில் அந்தந்த அறையில் இருந்தவர்கள் தங்களது அறையை பூட்டி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். அதற்கு முன்பாக நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த வழக்கறிஞர்கள் மூன்று பேர் கையில் கம்பு, மற்றும் கட்டைகளுடன் சென்று தாக்கியுள்ளனர்.

ஆனாலும், அவர்களிடம் இருந்து தப்பித்த சிறுத்தையை நீண்ட நேரம் கழித்து தீயணைப்புத்துறையினர் பிடித்தனர். பின்னர், மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து சிறுத்தை பொதுமக்களை சரமாரியாக தாக்கியது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்பட்டது. 

மேலும் படிக்க: Cow Hug Day : '’காதலர் தினத்தன்று பசுவை கட்டியணைத்து கொண்டாடவும்” புதிய ஐடியாவுடன் வந்த விலங்குகள் நல வாரியம்..!

மேலும் படிக்க: நான் தேச விரோதியா? நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே - நடந்தது என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget