மேலும் அறிய

‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

எப்போதெல்லாம் பொதுப் பிரச்சினைகளை புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சினைக்குள் இழுக்கிறோமோ அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது - ஜூனியர் என்.டி.ஆர்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தான் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்தனை நாட்கள் தான் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், இன்று தனது மனைவி குறித்து அவதூறாக பேசுவதாகவும், தான் மானத்துடன் வாழ்பவன், இனி என்னால் இதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார். அடுமட்டுமின்றி இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என கூறி பேரவையிலிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதைப் பற்றி பேசினாலும் அது நமது ஆளுமையை வரையறுக்கிறது. அரசியலில், விமர்சனங்கள் மற்றும் பதிலடிகள் மிகவும் பொதுவானவை, ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்சனைகளுக்கு மட்டும்  இருக்க வேண்டுமெயொழிய தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. 

 

நேற்றைய சட்டப்பேரவை சம்பவம் என்னைத் தூண்டிவிட்டது. எப்போதெல்லாம் பொதுப் பிரச்சினைகளை புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சினைக்குள் இழுக்கிறோமோ அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது. அது தவறு. 

பெண்களை மதிப்பது நமது கலாசாரம், அது நமக்குள் பொதிந்துள்ள ஒரு பாரம்பரியம். மேலும் இதுபோன்ற பாரம்பரியத்தை நமது வருங்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என காணொலி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக சந்திரபாபுவின் குற்றச்சாட்டு குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடித்தது ஒரு நாடகம். ஆம். சந்திரபாபு நாயுடுவின் நிலையும், அவர் விரக்தியில் இருக்கிறார் என்பது எனக்கு மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில மக்கள் அவரை வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்கூட, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் நிராகரிப்பைச் சந்தித்தார்.


‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

சந்திரபாபுநாயுடு அனைத்திலும் அரசியல் மைலேஜ் பெற மட்டுமே முயற்சிக்கிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்போது, நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் அனைத்து கண்களுக்கும் தெரிந்தது.அவரது குடும்பத்தை பற்றி எங்கள் தரப்பில் பேசியதற்கான எந்த குறிப்பும் இல்லை. ஆனால், என்னுடைய கொல்லப்பட்ட மாமா, தாய் மற்றும் சகோதரி உள்பட எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி சந்திரபாபுவே பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள பதிவுகள் அதை தெளிவாக நிரூபிக்கின்றன” என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Heatwave Orange Alert : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! இந்த 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget