மேலும் அறிய

Pawan Kalyan: ‘வாராரு...வாராரு’ .. மக்கள் குறைகளை கேட்க யாத்திரை கிளம்பிய நடிகர் பவன் கல்யாண்..!

முன்னணி தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் மக்களின் குறைகளை கேட்கும் வண்ணம் யாத்திரை தொடங்கியுள்ளார்.

முன்னணி தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் மக்களின் குறைகளை கேட்கும் வண்ணம் யாத்திரை தொடங்கியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது. தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டவும், மக்களை கவரவும் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. 

தற்போது அங்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை  எப்படியாவது வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டிக் கொண்டு களம் கண்டுள்ளன. அந்த வகையில் மக்களின் குறைகளை கேட்க  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் யாத்திரை தொடங்கியுள்ளார்.

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘ஜன சேனா’ கட்சியை தொடங்கினார். இந்த கட்சி இப்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக அடங்கிய கூட்டணியில் உள்ளது. யாத்திரை மேற்கொள்ள வராஹி போன்ற ராணுவம் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 23 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதற்காக நேற்று குண்டூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாக பூஜை நடைபெற்றது. ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. 

முன்னதாக  கிழக்கு கோதாவரி மாவட்டம் கத்திபுடி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜனசேனா கட்சி அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைக்கும் என தெரிவித்திருந்தார்.  ஆந்திர அரசியலில் மக்கள் பயணம் ஒன்றும் புதிதல்ல. ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் லோகேஷ் உள்ளிட்டோர் மக்களை தேடி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget