மேலும் அறிய

Soldier Missing: விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் மாயம்.. காரில் இருந்த ரத்தக் கறை.. காஷ்மீரில் பரபரப்பு

விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் மாயமாகியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டது. அது, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், சட்டப்பிரிவு 370ஐ நீக்கி நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமைதி நிலவி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாயமான ராணுவ வீரர்:

இந்த நிலையில், விடுமுறைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர் மாயமாகியுள்ளார். இது, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் காலாட்படை பிரிவைச் சேர்ந்த ரைபிள்மேன் ஜாவேத் அஹ்மத்,  ரமலான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். நாளை பணியில் சேரவிருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், அவர் மாயமாகியிருப்பது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்துள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் சந்தையில் இருந்து சில பொருட்களை வாங்க அவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் ஆல்ட்டோ காரை ஓட்டி சென்றிருக்கிறார். இரவு 9 மணி ஆகியும் அவர் திரும்பாததால், அவரது குடும்பத்தினர் தேடத் தொடங்கினர். 

சந்தைக்கு அருகில் அவரின் கார் கண்டெடுக்கப்பட்டது. அதில், ரத்தக் கறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளனர். 25 வயது ராணுவ வீரரை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சந்தேகித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு, அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தனது மகனை விடுவிக்கக் கோரி தாயார் வெளியிட்ட வீடியோ மெசேஜில், "தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். என் மகனை விடுதலை செய்யுங்கள்.

மகனை விடுவிக்கக் கோரி கதறும் தாய்:

என் ஜாவேதை விடுதலை செய்யுங்கள். நான் அவரை ராணுவத்தில் வேலை செய்ய விடமாட்டேன். ஆனால். தயவுசெய்து அவரை விடுவிக்கவும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

மாயமான ராணுவ வீரரின் தந்தை முகமது அயூப் வானி கூறுகையில், "எனது மகன் லடாக்கில் பணியமர்த்தப்பட்டான். ஈத் முடிந்து வீட்டிற்கு வந்த அவர் நாளை மீண்டும் பணியில் சேரவிருந்தார். நேற்று மாலை மார்க்கெட்டில் பொருட்களை வாங்க வெளியில் சென்றான். அவரை சிலர் தடுத்து நிறுத்தி கடத்திச் சென்றனர். அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், தயவுசெய்து என் மகனை விடுவிக்கவும்" என்றார்.

கடந்த காலங்களில் விடுமுறையில் வீட்டில் இருந்த பல ராணுவ வீரர்கள் அப்பகுதியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
Embed widget