மேலும் அறிய

Madhya Pradesh: கோதுமை சாக்கா..? சிமெண்டு சாக்கா..? அரசு விநியோகித்த உணவுமூட்டையில் கலப்படம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில்  அரசு கொள்முதல் செய்த கோதுமையில் மண், கான்கிரீட், தூசி கலந்ததாகக் கூறப்படும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில்  அரசு கொள்முதல் செய்த கோதுமையில் மண், கான்கிரீட் மற்றும் மண் தூசி கலந்ததாகக் கூறப்படும் சைலோ பேக் சேமிப்பு நிறுவனத்தின் கிளை மேலாளர் உட்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு,  சாத்னா மாவட்டம் நாகோடு பகுதியில் உள்ள ஒரு மகளிர் சுய உதவிக்குழு மூலம் அரசு கொள்முதல் செய்த நெல் சாக்குகளில் மண் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோதுமை:

கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 7 லட்சம் குவிண்டால் கோதுமை சம்பந்தப்பட்ட சிலாப்பில் சேமித்து வைக்கப்பட்டது, அதில் சுமார் 3 லட்சம் குவிண்டால் ஏற்கனவே பீகார் மற்றும் ஜார்கண்ட் தவிர மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொது விநியோக முறையின் (PDS) கீழ் விநியோகிக்கப்பட்டது. 

கடந்த வாரம் அரசு கொள்முதல் செய்யும் கோதுமையுடன் மண், கான்கிரீட், தூசி கலக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்படவுள்ள கோதுமைகளை சேமிக்கும் சிலோவில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரியும் ஆயுஷ் பாண்டே என்பவர் இந்த வீடியோவை படம்பிடித்து பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிலோ நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகம் தன்னை பணி நீக்கம் செய்ததாகவும் அவர் கூறினார்.

மண், கான்கிரீட் கலந்த கோதுமை:

பல துறைகளைச் சேர்ந்த குழு நடத்திய ஆய்வில், பிபிஎல் குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்காக உணவு தானியங்கள் அனுப்பப்படுவதற்கு முன்பு, பண்டா கிராமத்தில் உள்ள சிலாப் பகுதியில் அரசு கொள்முதல் செய்த கோதுமையுடன் மணல், கான்கிரீட் மற்றும் மண் தூள் கலக்கப்பட்டது தெரியவந்தது.

நேற்று (02/02/2023) செய்தியாளர்கள் சார்பில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  “இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள்,” என்று முதல்வர் சவுகான் கூறினார்.

குவியும் கண்டனங்கள்:

இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிலோ பேக் சேமிப்பு நிறுவனத்தின் கிளை மேலாளர் ஜோதி பிரசாத், பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆபரேட்டர் ஆயுஷ் பாண்டே மற்றும் நான்கு பேர் உட்பட 6 பேர் மீது ராம்பூர் பகேலன் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் உணவுப் பொருட்களில் மணல், மண், காங்கிரட், தூசு ஆகியவை திட்டமிட்டு கலக்கப்படுவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தில் பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget