மேலும் அறிய

Supreme Court Live: உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வு நேரலை.. இந்த விஷயங்கள் முக்கியம்..

இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நேரடியாக இன்று ஒளிபரப்பப்பட்டது.

இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணை நேரடியாக இன்று ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் இன்று முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் முறையாக உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் 4 வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான இந்த அமர்வின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பட்டது. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் நேரலையை ரெக்கார்ட் செய்யவோ வேறு நபர்கள் ஒளிப்பரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

உச்சநீதிமன்ற நேரலை தொடர்பான நிபந்தனைகள்:

  • காட்சி, அச்சு உள்ளிட்ட எந்த வகை ஊடகமாக இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் நேரலையை ரெக்கார்டிங் செய்யவோ, தங்களுடைய தளத்தில் ஒளிபரப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன் சேர்ந்து தகவல் தொடர்புச்  சட்ட பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்படும். 
  • இந்த வழக்கு விசாரணையின் நேரலையை பார்க்கும் எந்த நபராக இருந்தாலும் மேலே கூறப்பட்ட விதியை பின்பற்ற வேண்டியது அவசியம்.
  • உச்சநீதிமன்றத்திடம் இருந்து எழுத்து பூர்வமாக அனுமதி பெற்ற பிறகே நேரலையை ரெக்கார்டிங் செய்யவோ, தங்களுடைய தளத்தில் ஒளிபரப்பவோ முடியும். 
  • உச்சநீதிமன்றத்தின் நேரலை பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற தேவைகளுக்கு மற்றும் கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இவை எதுவும் தொழில் முறைச்சார்ந்த பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட கூடாது. 
  • உச்சநீதிமன்ற நேரலையை வேறு எந்த ரெக்கார்டிங் சாதனத்தை பயன்படுத்தியும் ரெக்கார்ட் செய்ய கூடாது.

 

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை நேரலை செய்வது தொடர்பாக 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நேரலை அல்லது வேப் காஸ்டிங் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் கூட்டம் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன்று முதல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணை நேரலை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது. அந்த முடிவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரணை செய்த வழக்குகள் மட்டும் நேரலை செய்யப்பட்டிருந்தது. அவருடைய கடைசி நாள் பணி என்பதால் அது மட்டும் நேரலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget