மேலும் அறிய

Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? வெள்ளை ஆதாரிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விவரங்கள் இதோ..!

Blue Aadhaar Card: நீல நிற மற்றும் வெள்ளை நிற ஆதார் அட்டை இடையேயான வித்தியாசத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.

Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? அதற்கு எப்படி விண்ணப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

நீல நிற ஆதார் அட்டை:

இந்தியாவில், பல்வேறு வகையான அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெற ஆதார் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது. பரவலாக காணப்படும் வெள்ளை நிற ஆதார் அட்டையைத் தவிர, குழந்தைகளுக்காக அரசாங்கம் பிரத்யேகமாக தயாரிக்கும் நீல நிற ஆதார் அட்டையும் உள்ளது. இது 'பால் ஆதார் அட்டை' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பின்புற நிறம் வெள்ளைக்குப் பதிலாக நீல நிறத்தில் இருக்கும்.

யாருக்கு நீல நிற ஆதார் அட்டை?

நீல நிற ஆதார் அட்டை குழந்தைகளுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளுக்காக நீல நிற ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குப் பிறகு, 12 இலக்கங்களைக் கொண்ட இந்த நீல நிற ஆதார் அட்டை தானாகவே செல்லாததாகிவிடும்.

நீல ஆதார் அட்டை Vs வெள்ளை ஆதார் அட்டை

முதல் வித்தியாசம் என்னவென்றால், நீல நிற ஆதார் அட்டை ஐந்து அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. இரண்டாவது பெரிய விஷயம் என பார்த்தால், இந்த ஆதார் அட்டையில் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது.

5 வயதுக்குப் பிறகு செல்லாது

குழந்தைகள் 5 வயதைத் தாண்டியவுடன், அவர்களுக்கான நீல நிற ஆதார் அட்டை காலாவதியாகிவிடும். அதன் பிறகு, 15 வயது வரை செல்லுபடியாகும் புதிய ஆதார் அட்டையை உருவாக்க வேண்டும். 15 வயதிற்குப் பிறகு, புதிய ஆதார் அட்டையை உருவாக்க வேண்டும், அதில் பயோமெட்ரிக் தகவல்களும் அவசியம்.

நீல ஆதார் அட்டைக்கான ஆவணங்கள்

UIDAI இன் படி, குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டை மூலம் நீல நிற ஆதார் அட்டையைப் பெறலாம். குழந்தை மிகவும் இளமையாக இருந்து, இன்னும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கவில்லை என்றால், ஆதார் அட்டையைப் பெற குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட டிஸ்சார்ஜ் சீட்டைக் கொடுக்க வேண்டும்.

நீல நிற ஆதார் பதிவு செய்வது எப்படி?

நீல நிற ஆதார் அட்டையைப் பெற, நீங்கள் உங்கள் குழந்தையுடன் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுக்க மறக்காதீர்கள். பதிவு அலுவலகத்திற்குச் சென்று, குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் பதிவு படிவத்தை நிரப்பவும்.

பெற்றோரின் ஆதார் அவசியம்

உங்கள் குழந்தையின் நீல நிற ஆதார் அட்டை உங்கள் ஆதார் அட்டையில் உருவாக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் ஆதார் அட்டையை பதிவு அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள்.

பயோமெட்ரிக் இல்லையென்றால், என்ன?

மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீல நிற ஆதார் அட்டைக்கு குழந்தையின் பயோமெட்ரிக் தேவையில்லை, குழந்தையின் புகைப்படம் மட்டுமே கிளிக் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து தேவையான வெரிஃபிகேஷன் மேற்கொள்ளப்படும்.

நிரந்தர மொபைல் எண் அவசியம்:

நீல நிற ஆதார் அட்டைக்கான பதிவு படிவத்தை நிரப்பும்போது, ​​​​நீங்கள் நிரந்தர மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும், இந்த மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP மூலம் மட்டுமே ஆதார் அட்டை பதிவு செய்து தரப்படும்.

 60 நாட்களில் நீல நிற ஆதார்:

சமர்பித்த ஆவணங்கள் மற்றும் மொபைல் எண்ணைச் சரிபார்த்த பிறகு, 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டையைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இணையதளத்திற்குச் சென்று நீல நிற ஆதார் அட்டை நகலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget