மேலும் அறிய

காவலர்களே! பேசுங்க.! ஆனா சோஷியல் மீடியாவ்ல எதுவும் வேண்டாம் - இமாச்சலில் இப்படி ஒரு பிரச்னை!!

இமாச்சலப் பிரதேச காவல்துறையின் கான்ஸ்டபிள்களின் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு குறித்து அதிருப்தி அதிகரித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் ஊதிய சமத்துவத்திற்கான பிரச்சாரத்தை நடத்தி கிளர்ச்சி செய்யும் காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஹிமாச்சல் முதல்வர் எச்சரித்த அடுத்த நாள், ஹிமாச்சலப் பிரதேச காவல்துறை வெள்ளிக்கிழமை அவர்களின் புகார்களை சமூக ஊடகங்களில் தெரிவிப்பதற்கு தடை விதித்து அம்மாநில காவலர்களுக்கு அறிவுறுத்தியது. டிஜிபி சஞ்சய் குண்டு வெளியிட்டுள்ள அறிவுரையில் கூறப்பட்டுள்ளதாவது: "காவல் துறையில் உள்ள சமீபத்திய பிரச்சனைகள் காரணமாக, அனைத்துப் பிரிவு காவல் மேல் அதிகாரிகளுக்கும் தங்கள் தலைமையின் கீழ் உள்ள காவலர்களுக்கு ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்." ஊதிய விகிதங்கள் தொடர்பான தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக இமாச்சல பிரதேச அரசுக்கு காவல்துறை தலைமையகம் மூலம் தெரிவிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காவலர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்கவும், அவர்கள் வழக்கமான முறையில் தங்கள் பணிகளைச் செய்து, மெஸ்ஸில் உணவு உட்கொண்டு "இணக்கத்தை உறுதிப்படுத்தவும்" என்று உத்தரவின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேச காவல்துறையின் ட்விட்டர் ஹேண்டில் ஒரு ஆலோசனையை ட்வீட் செய்துள்ளது, அதிலும் காவலர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

காவலர்களே! பேசுங்க.! ஆனா சோஷியல் மீடியாவ்ல எதுவும் வேண்டாம் - இமாச்சலில் இப்படி ஒரு பிரச்னை!!

ஜேசிசி கூட்டத்தில், ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதங்களை அறிவித்து, ஒப்பந்த காலத்தை மூன்றில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைத்து முதல்வர் அறிவித்தார். ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் அரசின் முடிவு காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வியாழனன்று, ஹோம் மினிஸ்ட்ரி இலாகாவையும் வைத்திருக்கும் தாக்கூர், குறைகள் குறித்து சமூக ஊடக பிரச்சாரத்தை நடத்தும் காவல்துறையினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எச்சரித்திருந்தார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், "காவல்துறை ஒரு ஒழுக்கமான படை என்றும், அவர்களின் குறைகளை எழுப்ப அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறினார். அவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், இதை சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதும், சிலர் தூண்டுவதும் சரியல்ல, எனவே, டிஜிபி அவர்கள் மெஸ்ஸில் சாப்பாடு உண்டு, சமூக ஊடகங்களில் கருத்துகள் கூறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்," என்று அவர் கூறினார், மேலும் அவர் தனது வீட்டில் போலீஸ்காரர்கள் கூடியது போராட்டம் அல்ல. காவல்துறையின் ஒரு தூதுக்குழு என்னைச் சந்திக்க வேண்டியிருந்தது, ஆனால் அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. இது ஒரு சம்பவம் தான், போராட்டம் அல்ல,'' என்றார்.

காவலர்களே! பேசுங்க.! ஆனா சோஷியல் மீடியாவ்ல எதுவும் வேண்டாம் - இமாச்சலில் இப்படி ஒரு பிரச்னை!!

இமாச்சலப் பிரதேச காவல்துறையின் கான்ஸ்டபிள்களின் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு குறித்து அதிருப்தி அதிகரித்து வருகிறது. கூட்டு ஒருங்கிணைப்புக் குழு (ஜேசிசி) கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்படாததால் கோபமடைந்த போலீசார், நவம்பர் 28 அன்று அமைதியான போராட்டத்திற்காக முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் இல்லத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். அதன் பிறகு காவல்துறையினர் மெஸ்ஸில் உணவு உண்பதை நிறுத்தியுள்ளனர். அவசரமாக நிதித்துறை செயலாளருடன் கூட்டத்தை கூட்டிய முதல்வர், போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்களிடம், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனான கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதிகாரிகளுடனான கூட்டம் இன்னும் நடத்தப்படவில்லை. ₹10,300 + ₹3,200 ஊதிய விகிதத்திற்கான மானியத்திற்கான காவலர்களின் காலத்தை இரண்டிலிருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிக்கும் அரசாங்கத்தின் முடிவால் சுமார் 5,700 காவலர்கள் வேதனையடைந்துள்ளனர். 2013 கொள்கையின்படி ஊதிய விகிதங்களை வழங்குமாறு அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget